NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்ய விரும்பும் 90% இந்திய நிறுவனங்கள்; ஆய்வில் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்ய விரும்பும் 90% இந்திய நிறுவனங்கள்; ஆய்வில் தகவல்
    அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்ய விரும்பும் 90% இந்திய நிறுவனங்கள்

    அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்ய விரும்பும் 90% இந்திய நிறுவனங்கள்; ஆய்வில் தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 29, 2024
    10:31 am

    செய்தி முன்னோட்டம்

    ஜேஎல்எல் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 90% நிறுவனங்கள், ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலைகளை மேற்கொள்வதை விரும்புவது தெரிய வந்துள்ளது.

    இது உலக அளவில் மிகவும் அதிகமாகும். இந்த விருப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    54% இந்திய நிறுவனங்கள் 2030 ஆம் ஆண்டில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் நாட்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றன.

    இது உலகளவில் 43% ஆகும். 95% முடிவெடுப்பவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முதலீடுகளை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பணியிட நடவடிக்கைகளில் ஏஐ பயன்பாட்டில் இந்தியாவின் விரைவான ஒருங்கிணைப்பை கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

    ஏஐ ஆனது பணியாளர் மேலாண்மை மற்றும் பணியிட வடிவமைப்பை மாற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 94% வணிகங்கள் செயல்பாடுகளில் அதன் ஏஐ பயன்பாட்டை எதிர்பார்க்கின்றன.

    செலவினாக்கள் 

    இந்திய நிறுவனங்களின் செலவின அதிகரிப்பு

    77% இந்திய நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த முன்முயற்சிகளுக்கான செலவினங்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், நிலைத்தன்மையும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

    2030க்குள், ஏறக்குறைய பாதி நிறுவனங்கள் உயர்மட்ட பசுமைச் சான்றிதழ்களைக் கொண்ட கட்டிடங்களுக்கு பிரீமியம் செலுத்தத் தயாராக உள்ளன.

    இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் தலைவர்களில் சுமார் 44% பேர் நிறுவன மாற்றங்கள் காரணமாக நீண்ட கால திட்டமிடலில் உள்ள சிரமங்களை மேற்கோள் காட்டினர்.

    அதே சமயம் 46% பேர் மற்ற வணிக அலகுகளுடன் வரையறுக்கப்பட்ட ஒருங்கிணைப்பை உகந்த விளைவுகளுக்கு தடையாக சுட்டிக்காட்டினர்.

    தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றால் இயக்கப்படும் இந்தியாவின் வளர்ந்து வரும் பணியிட சூழலை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    செயற்கை நுண்ணறிவு
    வணிக புதுப்பிப்பு
    வணிக செய்தி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக தகவல் அமெரிக்கா
    இனி 3 முறை எழுதலாம்; JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான தகுதியில் தளர்வு தேர்வு
    இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்பேஸ்எக்ஸ்
    விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வருவார் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது விளாடிமிர் புடின்

    செயற்கை நுண்ணறிவு

    வணிக செயல்பாடுகளை மேம்படுத்த தனி செயற்கை நுண்ணறிவு பிரிவு; மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு மஹிந்திரா
    இந்தியாவில் AI பயன்பாடுகளை கூகுள் விரிவுபடுத்தும்: சுந்தர் பிச்சை சுந்தர் பிச்சை
    செயற்கை நுண்ணறிவை ஆசிரியர்களாக களமிறக்கும் இந்தியாவின் முதல் ஐஐஎம் என்ற சாதனை படைத்த ஐஐஎம் சம்பல்பூர் இந்தியா
    தானே பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்யும் மைக்ரோசாஃப்டின் புதிய AI பாதுகாப்புக் கருவி  மைக்ரோசாஃப்ட்

    வணிக புதுப்பிப்பு

    உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம்; லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம் மத்திய அரசு
    தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி இந்தியா
    நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு தங்கம் வெள்ளி விலை
    குடிநீர் பாட்டில்கள், சைக்கிள்களின் ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க திட்டம்; அமைச்சர்கள் குழு முன்மொழிவு ஜிஎஸ்டி

    வணிக செய்தி

    பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் ஆஜராவதை கடைசி நேரத்தில் தவிர்த்த செபி தலைவர் மாதபி பூரி புச்  செபி
    இப்போது ₹2,999க்கு மேல் Blinkit-இல் ஆர்டர் செய்தால், EMI ஆப்ஷன் உண்டு; எப்படி பயன்படுத்துவது? வணிகம்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவு இந்தியா
    இனி வெளிநாடு வாழ் இந்தியர்களும் புக் செய்யலாம்; ஸ்விக்கியின் அசத்தல் அறிவிப்பு ஸ்விக்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025