Page Loader
அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்ய விரும்பும் 90% இந்திய நிறுவனங்கள்; ஆய்வில் தகவல்
அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்ய விரும்பும் 90% இந்திய நிறுவனங்கள்

அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்ய விரும்பும் 90% இந்திய நிறுவனங்கள்; ஆய்வில் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 29, 2024
10:31 am

செய்தி முன்னோட்டம்

ஜேஎல்எல் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 90% நிறுவனங்கள், ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலைகளை மேற்கொள்வதை விரும்புவது தெரிய வந்துள்ளது. இது உலக அளவில் மிகவும் அதிகமாகும். இந்த விருப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 54% இந்திய நிறுவனங்கள் 2030 ஆம் ஆண்டில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் நாட்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றன. இது உலகளவில் 43% ஆகும். 95% முடிவெடுப்பவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முதலீடுகளை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பணியிட நடவடிக்கைகளில் ஏஐ பயன்பாட்டில் இந்தியாவின் விரைவான ஒருங்கிணைப்பை கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது. ஏஐ ஆனது பணியாளர் மேலாண்மை மற்றும் பணியிட வடிவமைப்பை மாற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 94% வணிகங்கள் செயல்பாடுகளில் அதன் ஏஐ பயன்பாட்டை எதிர்பார்க்கின்றன.

செலவினாக்கள் 

இந்திய நிறுவனங்களின் செலவின அதிகரிப்பு

77% இந்திய நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த முன்முயற்சிகளுக்கான செலவினங்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், நிலைத்தன்மையும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 2030க்குள், ஏறக்குறைய பாதி நிறுவனங்கள் உயர்மட்ட பசுமைச் சான்றிதழ்களைக் கொண்ட கட்டிடங்களுக்கு பிரீமியம் செலுத்தத் தயாராக உள்ளன. இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் தலைவர்களில் சுமார் 44% பேர் நிறுவன மாற்றங்கள் காரணமாக நீண்ட கால திட்டமிடலில் உள்ள சிரமங்களை மேற்கோள் காட்டினர். அதே சமயம் 46% பேர் மற்ற வணிக அலகுகளுடன் வரையறுக்கப்பட்ட ஒருங்கிணைப்பை உகந்த விளைவுகளுக்கு தடையாக சுட்டிக்காட்டினர். தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றால் இயக்கப்படும் இந்தியாவின் வளர்ந்து வரும் பணியிட சூழலை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.