NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள்
    இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள்

    இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 31, 2023
    11:53 am

    செய்தி முன்னோட்டம்

    ரூ.17,000 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப வன்பொருட்கள் தயாரிப்பிற்கான PLI 2.0 (Production Linked Incentives) திட்டத்தினை கடந்த மே மாதம் அறிவித்தது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.

    இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் லேப்டாப், டேப்லட் மற்றும் சர்வர்கள் உள்ளிட்ட கணினி மற்றும் கணினி சார்ந்த மின்னணு சாதனங்களை உள்நாட்டில் தயாரிப்பவர்களுக்கு மானியம் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.

    இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு நேற்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 25 இந்திய நிறுவனங்கள் உட்பட 38 நிறுவனங்கள் PLI 2.0 திட்டத்திற்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

    ஆனால், ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா

    லேப்டாப் தயாரிப்புக் கட்டமைப்பை மேம்படுத்த புதிய முயற்சி:

    இந்தியாவிற்கு தேவையான லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் 70%-த்தை சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது இந்தியா.

    எனவே, ஸ்மார்ட்போன் தயாரிப்பைப் போலவே, லேப்டாப் உள்ளிட்ட இதர மின்சாதனங்களின் தயாரிப்புக் கட்டமைப்பையும் இந்தியாவில் மேம்படுத்துவே தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பிற்கான PLI 2.0 திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

    மேலும், முன்னர் மின்சாதனங்களின் இறக்குமதிக்கு எவ்வித தடையும் விதிக்கப்படாமல் இருந்ததனாலும், குறைந்த அளவிலான மானியம் வழங்கப்பட்டு வந்ததாலும், மின்சாதனத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிப்பை மேற்கொள்ள முன்வரவில்லை.

    தற்போது, நவம்பர் மாதம் முதல் மின்சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்து, கூடுதல் மானியம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மின்சாதனத் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் தயாரிப்பை மேற்கொள்ள ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வணிகம்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி நீரஜ் சோப்ரா
    சந்திரயான் 4: நிலவின் தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா சந்திரயான்
    40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி நரேந்திர மோடி
    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி நீரஜ் சோப்ரா

    வணிகம்

    2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI பிசிசிஐ
    நியூயார்க் நகரில் தனக்கு சொந்தமான காண்டோவை விற்பனை செய்திருக்கும் முகேஷ் அம்பானி அமெரிக்கா
    அதானி வில்மரின் 44% பங்குகளை விற்பனை செய்கிறதா அதானி குழுமம்? இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 10 தங்கம் வெள்ளி விலை

    தொழில்நுட்பம்

    5 ரூபாயில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி.. உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்! அமெரிக்கா
    லென்ஸ் இல்லாத AI கேமராவை உருவாக்கிய பொறியாளர்.. எப்படி இயங்குகிறது? செயற்கை நுண்ணறிவு
    மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா! தொழில்நுட்பம்
    பணிநீக்க நிறுவனங்களின் பட்டியலில் புதிதாக இணைந்த ரெட்டிட்! அமெரிக்கா

    தொழில்நுட்பம்

    தொழில்நுட்ப ஊழியர்கள் இனி அதிக சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது! இந்தியா
    கால் ரெக்கார்டிங் வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் கூகுள்
    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு சைபர் பாதுகாப்பு
    உயர்தர ஆடியோ வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா ஸ்பாட்டிஃபை? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025