
தங்கம் விலை மாலையில் ₹440 உயர்வு; ஒரு சவரன் ₹92,640க்கு விற்பனை
செய்தி முன்னோட்டம்
திங்கட்கிழமை (அக்டோபர் 13) காலையில் தங்க விலை உயர்வை சந்தித்த நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் ஒரு கிராம் ₹25 அதிகரித்த நிலையில், மாலையில் ₹55 அதிகரித்து ₹11,580 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு காலையில் ₹200 அதிகரித்த நிலையில், மாலையில் ₹440 அதிகரித்து ₹92,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை மாலையில் அதிகரித்து ஒரு கிராம் ₹12,633 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,01,064 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் உயர்வு
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது மாலையில் ஒரு கிராம் ₹9,570 ஆகவும், ஒரு சவரன் ₹76,560 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் திங்கட்கிழமை மாலை மீண்டும் விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை திங்கட்கிழமை காலையில் ஒரு கிராம் ₹5 அதிகரித்த நிலையில், மாலையில் ₹2 அதிகரித்து தற்போது ஒரு கிராம் ₹197 ஆகவும், ஒரு கிலோ ₹1,97,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலையற்ற தன்மையிலேயே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.