NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / வர்த்தக முத்திரை மீறல் தொடர்பாக இந்திய பேட்டரி உற்பத்தியாளர் மீது வழக்கு தொடர்ந்தது டெஸ்லா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வர்த்தக முத்திரை மீறல் தொடர்பாக இந்திய பேட்டரி உற்பத்தியாளர் மீது வழக்கு தொடர்ந்தது டெஸ்லா 
    வர்த்தக முத்திரை மீறல் மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறைகளை மேற்கொண்டதாக டெஸ்லா நிறுவனம் வழக்கு

    வர்த்தக முத்திரை மீறல் தொடர்பாக இந்திய பேட்டரி உற்பத்தியாளர் மீது வழக்கு தொடர்ந்தது டெஸ்லா 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 06, 2024
    09:57 am

    செய்தி முன்னோட்டம்

    உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்திய பேட்டரி தயாரிப்பாளரான டெஸ்லா பவர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

    குருகிராம் சார்ந்த நிறுவனத்திற்கு எதிராக, வர்த்தக முத்திரை மீறல் மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறைகளை மேற்கொண்டதாக டெஸ்லா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

    அந்த பாட்டரி நிறுவனத்தின் விளம்பரத்தில் நன்கு அறியப்பட்ட பிராண்ட்(டெஸ்லா) பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறி, அதற்கு எதிராகத் தடை உத்தரவு மற்றும் நஷ்டஈடு கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது.

    டெலாவேர் சட்டங்களின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட டெஸ்லா, பல உலகளாவிய அதிகார வரம்புகளில் வர்த்தக முத்திரை பதிவுகளை தன்னிடம் கொண்டுள்ளது. டெஸ்லா, 2022-ல் பிரதிவாதிகளுக்கு நிறுத்தம் மற்றும் விலகல் அறிவிப்பை அனுப்பியது.

    நீதிமன்ற அறிவிப்பு

    டெஸ்லா பவர்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

    ஆகஸ்ட் 2022 மற்றும் மார்ச் 2023 க்கு இடையில் பல கடிதப் பரிமாற்றங்கள் இருந்தபோதிலும், இந்திய நிறுவனம் 'டெஸ்லா' பெயரில் தங்கள் தயாரிப்புகளை தொடர்ந்து சந்தைப்படுத்தியது.

    இது வழக்கைத் தாக்கல் செய்ய டெஸ்லா இன்க் நிறுவனத்தைத் தூண்டியது.

    டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அனிஷ் தயாள், டெஸ்லா பவர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற பிரதிவாதிகளுக்கு மே 2 அன்று நோட்டீஸ் அனுப்பினார்.

    மேலும் விசாரணைகளை மே 22, 2024 அன்று நடத்த நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

    ஆட்டோமொபைல்கள், இன்வெர்ட்டர்கள் மற்றும் யுபிஎஸ் அமைப்புகளுக்கான லீட்-அமில பேட்டரிகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இந்திய நிறுவனம், மின்சார வாகனங்கள் எதையும் தயாரிப்பதில்லை என்று அதன் சட்டப் பிரதிநிதி மூலம் பதிலளித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்லா
    மின்சார வாகனம்

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    டெஸ்லா

    உலக பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதலிடத்தைப் பிடித்த எலான் மஸ்க்! எலான் மஸ்க்
    டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடர்ந்து குவியும் 'இனப் பாகுபாடு' குற்றச்சாட்டுக்கள்! எலான் மஸ்க்
    இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை: கார்களின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் இந்தியா
    இந்தியாவில் புதிய அலுவலகத்தை அமைக்கும் டெஸ்லா, இந்தியாவில் அதன் திட்டம் என்ன? எலான் மஸ்க்

    மின்சார வாகனம்

    வோக்ஸ்வேகன் இந்தியாவின் முதல் EV விரைவில் வெளியாகும் என தகவல் ஃபோக்ஸ்வேகன்
    ஸ்கோடா நிறுவனத்தின் ENYAQ iV எலக்ட்ரிக் எஸ்யூவி நாளை அறிமுகம் ஸ்கோடா
    அடுத்த ஆண்டு இந்தியாவில் EVயை அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா  டொயோட்டா
    ஐடி.3 GTX மாடலை அறிமுகப்படுத்தியது வோக்ஸ்வேகன் ஃபோக்ஸ்வேகன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025