NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்?
    இந்தியாவில் தங்களுடைய முதலீட்டுத் திட்டங்கள் குறித்து அறிவித்திருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்

    இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 12, 2023
    02:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களுடைய புதிய வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

    இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடவும், தங்கள் கார் மற்றும் எஸ்யூவி பிளாட்ஃபார்ம்களை மேம்படுத்தவும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ரூ.20,000 கோடியை முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஹூண்டாய்.

    இதற்காக நடைபெற்ற நிகழ்வில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சிஇஓவான அன்சூ கிம் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பேசும் போது, இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புத் தளத்தை தமிழ்நாட்டில் மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவன சிஇஓ அன்சூ கிம்.

    ஹூண்டாய்

    ஹூண்டாயின் திட்டம் என்ன? 

    2028-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 6 புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிட ரூ.4,000 கோடியை முதலீடு செய்யவிருப்பதாக ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளில் 100 எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்களை அமைக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஹூண்டாய்.

    DC 150kW மற்றும் DC 60kW என இரண்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அமைப்புகள் கொண்டு 5 சார்ஜிங் மையங்கள், DC 150kW சார்ஜிங் அமைப்பு கொண்ட 10 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் மற்றும் DC 60kW சார்ஜிங் அமைப்பு கொண்ட 85 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் என 100 சார்ஜிங் மையங்களை அமைக்கவிருக்கிறது ஹூண்டாய்.

    மேலும், தங்களுடைய ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் தயாரிப்பு அளவையும் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹூண்டாய்
    இந்தியா
    ஆட்டோமொபைல்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஹூண்டாய்

    பெட்ரோல் டீசல் இரண்டிலும் கலக்கும் ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம்! இந்தியா
    கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்; ஆட்டோமொபைல்
    ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இது கார் இல்லை வீடா? ஹூண்டாய் வெர்னா காரின் சிறப்புகள்! வாகனம்

    இந்தியா

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் தீபக் போரியா, நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு தகுதி! உலகம்
    மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு  மத்திய பிரதேசம்
    திருமணம் செய்துகொள்ள அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளதா: ஒரே பாலின திருமண விவாதம்  உச்ச நீதிமன்றம்
    இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்  கர்நாடகா

    ஆட்டோமொபைல்

    காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும் கார்
    ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்! ஹூண்டாய்
    வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு! போக்குவரத்து காவல்துறை
    ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும் சூப்பரான டீசல் கார்கள் கார் உரிமையாளர்கள்

    தமிழ்நாடு

    நாடு முழுவதும் நீட் தேர்வு மே 07 இல் நடக்கிறது! முன் ஏற்பாடுகள் தீவிரம்  நீட் தேர்வு
    சிறையிலிருந்து வெளிவந்த 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கினார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    'மோக்கா' புயலுக்கு தயாராகுங்கள்: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு புதுச்சேரி
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025