LOADING...
ஏப்ரல் 1 முதல் புதிய பெட்ரோல் விதிமுறை: E20 பெட்ரோல் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு
ஏப்ரல்-1 முதல் E20 பெட்ரோல் கட்டாயம்

ஏப்ரல் 1 முதல் புதிய பெட்ரோல் விதிமுறை: E20 பெட்ரோல் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2026
02:19 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய எண்ணெய் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 2026 ஏப்ரல் 1 முதல் இந்தியா முழுவதும் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை புதிய தரத்திற்கு மாறுகிறது. இதன்படி, பெட்ரோலில் 20% வரை எத்தனால் கலக்கப்படுவதோடு, அதன் ஆக்டேன் அளவு (RON) 95-க்கு குறையாமல் இருப்பதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். 2014-15 முதல் தற்போது வரை எத்தனால் கலப்பு மூலம் சுமார் ₹1.40 லட்சம் கோடி அந்நியச் செலாவணியை இந்தியா சேமித்துள்ளது. எத்தனால் என்பது கரும்பு, மக்காச்சோளம் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள். இது பெட்ரோலை விட தூய்மையாக எரிந்து புகையை குறைக்கும். எத்தனால் தேவை அதிகரிப்பதால் கரும்பு மற்றும் தானிய பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இன்ஜின் பாதுகாப்பு

RON 95 மற்றும் இன்ஜின் பாதுகாப்பு

பெட்ரோல் இன்ஜினுக்குள் சீரற்ற முறையில் எரிந்து 'Knocking' சத்தத்தையும் பழுதையும் ஏற்படுத்துவதை தவிர்க்க RON 95 தரம் அவசியமானது. எத்தனால் இயல்பாகவே அதிக ஆக்டேன் மதிப்பை (108 RON) கொண்டது. எனவே, 20% எத்தனால் கலக்கும்போது எரிபொருளின் நிலைத்தன்மை அதிகரித்து இன்ஜின் பாதுகாக்கப்படுகிறது. 2023-2025-க்கு பிறகு தயாரிக்கப்பட்ட பெரும்பாலான இந்திய வாகனங்கள் E20 பெட்ரோலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதற்கு முந்தைய பழைய வாகனங்களில் மைலேஜ் 3% முதல் 7% வரை குறைய வாய்ப்புள்ளது. மேலும், பழைய வாகனங்களின் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் விரைவில் தேய்மானம் அடையக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement