
இந்தியாவின் முதல் மெட்ரோ-மால் ஒருங்கிணைந்த நிலையம் - சென்னை திருமங்கலத்தில் விரைவில் ஆரம்பம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் முதன்முறையாக, வணிக வளாகத்துக்குள் நுழைந்து அதிலிருந்து வெளியே செல்லும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் திட்டம் சென்னை நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முன்னோடியான முயற்சி முதலில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைமுறைக்கு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்(CMRL) செயல்படுத்தும் இந்த திட்டத்தில், 9 மாடிகள் கொண்ட மூன்று வணிக வளாகங்கள் கட்டப்படவுள்ளன.
இதன் மையமாக இரண்டு தளங்கள் கொண்ட புதிய மெட்ரோ நிலையம் அமைக்கப்படவுள்ளது.
குறிப்பாக, 4வது தளத்தில் ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளங்களில் ரயில்கள் இயக்கப்படுவதற்கான பாதைகள் உருவாக்கப்படும்.
மொத்தம் 6.85 லட்சம் சதுர அடியில் விரிந்து காணப்படும் இந்த கட்டுமானம், ஜப்பான் மற்றும் சீனாவின் மெட்ரோ கட்டிட வடிவமைப்புகளிலிருந்து உத்வேகம் பெற்றுள்ளது.
விவரங்கள்
வணிகம் மற்றும் அலுவலகங்கள் இடம் பெறும்
புதிய திட்டத்தின் படி, டவர் A, B, C, D என நான்கு கோபுரங்கள் கட்டப்படும். B கோபுரத்தில் 3 மற்றும் 4வது தளங்களில் மெட்ரோ நிலையம் அமைக்கப்படும்.
தரை தளங்களில் சில்லறை கடைகள், முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் வணிக வளாகங்கள், ஐந்து முதல் ஒன்பதாவது தளங்கள் வரை அலுவலக இடங்கள் ஒதுக்கப்படும்.
CMRL திட்ட இயக்குனர் டி. அர்ச்சுனன் கூறும்போது, "கோகுரா (ஜப்பான்), சோங்கிங் (சீனா) போன்ற நகரங்களில் உள்ள மெட்ரோ அமைப்புகளை மாதிரியாக கொண்டு இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளோம். இந்த வகை டிசைன், பயணிகளுக்கு தடையற்ற போக்குவரத்து அனுபவத்தை வழங்கும்," என்றார்.