லாரி உலகத்தின் ஜாம்பவான்கள் மீண்டும் வராங்க! அசோக் லேலண்ட் டாரஸ் மற்றும் ஹிப்போ மறுவருகை! மிரட்டும் புதிய வசதிகள்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், தனது வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற டாரஸ் மற்றும் ஹிப்போ ஆகிய டிரக் பெயர்களை மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கனரக வாகனங்களாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு, சுரங்கத் தொழில் மற்றும் நீண்ட தூர சரக்குப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
செயல்திறன்
நவீன தொழில்நுட்பமும் செயல்திறனும்
புதிய டாரஸ் மற்றும் ஹிப்போ டிரக்குகள் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மேம்பட்ட AVTR மாடுலர் பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளன: என்ஜின் திறன்: இரண்டு டிரக்குகளும் 8.0 லிட்டர் ஏ-சீரிஸ் 6-சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளன. இது 360bhp வரை ஆற்றலையும் 1,600Nm டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. பயன்பாடு: டாரஸ் வரிசை டிரக்குகள் சுரங்கம் மற்றும் கட்டுமானத் பணிகளுக்கும், ஹிப்போ வரிசை டிரக்குகள் நீண்ட தூர சரக்கு இழுவை பணிகளுக்கும் ஏற்றவை. வசதிகள்: ஓட்டுநரின் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட கேபின்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் தானியங்கி டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் இதில் தரமாக வழங்கப்பட்டுள்ளன.
பார்வை
வரலாற்றில் ஒரு பார்வை
1980 களில் இருந்து 2000-களின் தொடக்கம் வரை இந்திய நெடுஞ்சாலைகளில் ஹிப்போ ஒரு சக்திவாய்ந்த வாகனமாகத் திகழ்ந்தது. அதேபோல், இந்தியாவின் முதல் மல்டி-ஆக்சில் டிரக் என்ற பெருமை டாரஸ் வாகனத்திற்கு உண்டு. இன்றும் கூட பல இடங்களில் மல்டி-ஆக்சில் டிப்பார்களை மக்கள் டாரஸ் என்றே அழைத்து வருகின்றனர். அந்தப் பெயருக்கு இருக்கும் நற்பெயரையும் நம்பிக்கையையும் மீண்டும் நிலைநாட்டும் வகையில் இந்தத் தொடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு
சந்தை வாய்ப்புகள் மற்றும் முன்பதிவு
இந்த புதிய வாகனங்களை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷேனு அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். நாடு முழுவதும் உள்ள அசோக் லேலண்ட் டீலர்ஷிப்களில் இந்த டிரக்குகளுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ஹிப்போ டிரக்குகளில் கூடுதலாக டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ரிவர்ஸ் கேமரா மற்றும் ஏடிஏஎஸ் (ADAS) போன்ற நவீன பாதுகாப்பு வசதிகளும் விருப்பத் தேர்வாக வழங்கப்படுகின்றன.