NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த சிதிலங்கள், இறந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த சிதிலங்கள், இறந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் 
    5 நபர்களுடன் கடலுக்கடியில் சென்று, வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி

    டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த சிதிலங்கள், இறந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 29, 2023
    11:10 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 1912ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகள், அமெரிக்காவின் வட அட்லாண்டிக் கடலுக்கடியில் உள்ளது.

    அதை காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கியானது, சென்ற வாரத்தில், கடலுக்கு அடியில் நசுங்கியது. அதில் பயணப்பட்ட 5 பேரும் அந்த நீர்மூழ்கியிலேயே இறந்திருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நீர்மூழ்கி கப்பல், உள்நோக்கி வெடித்தல்(Implode) காரணமாக நசுங்கி இருக்கக்கூடும் எனவும், கடலுக்கு அடியில் இருக்கும் அதிக அழுத்தத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

    அந்த நீர்மூழ்கி கப்பலின் சிக்னல் துண்டிக்கப்பட்டதும், அதில் பயணப்பட்டவர்களை காப்பாற்ற அமெரிக்கா கடற்படை துரிதமாக செயலில் இறங்கியது.

    தொடர்ந்து 4 நாட்கள் தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வந்தது.

    card 2

    சிதிலங்கள் மீட்கப்பட்டன 

    தேடுதலுக்கு, அமெரிக்காவிற்கு உதவ கனடா கடற்படையும் உடன்வந்தது. 96 மணி நேர தேடுதலுக்கு பிறகும் அவர்களை அமெரிக்க மற்றும் கனட கடற்படையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனையடுத்து, அந்த நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்கள் அதற்கு மேலும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இன்று டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில், இறந்தவர்களின் உடல்களும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்ய, இந்த சிதிலங்கள் அனுப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்கும் நெட்ஃபிலிக்ஸின் முயற்சி பலனளித்ததா? நெட்ஃபிலிக்ஸ்
    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு 'மோடி ஜி தாலி' அறிமுகம்  இந்தியா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  உலகம்
    ரோப்லாக்ஸ் பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரை செய்த கனக்கார்டு நிறுவனம், ஏன்? கேம்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025