NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு

    மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 23, 2024
    06:30 pm

    செய்தி முன்னோட்டம்

    சீன ஆராய்ச்சி கப்பலான சியான் யாங் ஹாங் 03, அடுத்த மாத தொடக்கத்தில் மாலத்தீவின் தலைநகர் மாலேயில் நிறுத்தப்படும் என்று மாலத்தீவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

    உளவு நோக்கங்களுக்காக இந்தியப் பெருங்கடலை மேப்பிங் செய்யும் உளவுக் கப்பலாக சியான் யாங் ஹாங் 03 பார்க்கப்படுகிறது.

    ஆனால், மாலத்தீவு கடற்பரப்பில் அந்த கப்பல் எந்த ஒரு ஆராய்ச்சியையும் நடத்தாது என்றும், அவசர அழைப்புகளை எதிர்கொள்வதற்காக மட்டுமே அந்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் மாலத்தீவு அரசு கூறியுள்ளது.

    "நட்பு நாடுகளின் கப்பல்களை எப்போதும் வரவேற்கும் இடமாக மாலத்தீவு இருந்து வருகிறது. மேலும் அமைதியான நோக்கங்களுக்காக அவசர அழைப்புகளை ஏற்கும் இராணுவக் கப்பல்களை தொடர்ந்து மாலத்தீவு ஆதரித்து வருகிறது." என்று மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.

    கஃஜ்வ்க் 

     இந்தியா-மாலத்தீவுக்கு இடையேயான பதட்ட நிலை

    இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவுகள் சேதமடைந்துள்ள நிலையில், சீனாவின் ஆராய்ச்சி கப்பல் குறித்த இந்த செய்தி வெளியாகியுள்ளது.

    பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார்.

    இதையடுத்து, மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கருதி பிரதமர் மோடியையும் லட்சத்தீவையும் 3 மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்து தரக்குறைவாக பேசினர்.

    அதனைதொடர்ந்து, இந்தியா-மாலத்தீவுக்கு இடையே பதட்ட நிலையில் உருவானது.

    அதன் பிறகு, மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய படைகளை திரும்பப்பெறுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு கேட்டு கொண்டது. மாலத்தீவு மக்களின் அவசர அழைப்புகளை ஏற்க இந்திய விமானப்படை கப்பல்கள் அந்நாட்டில் நிறுத்தப்பட்டிருந்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    சீனா
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உலகம்
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    சீனா

    பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு ஜி20 மாநாடு
    சீனாவில் பரவி வரும் புதுவகை நிமோனியா காய்ச்சல்- விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார நிறுவனம்
    சீனாவில் பரவும் புதிய வகை நிமோனியா பற்றி இதுவரை அறிந்தவை உலக சுகாதார நிறுவனம்
    சீனாவில் பரவிவரும் வினோத நிமோனியா காய்ச்சல்; இந்தியாவை பாதிக்குமா? நிமோனியா

    இந்தியா

    கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு  கர்நாடகா
    நாளை திறக்கப்பட இருக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தின் வீடியோக்கள்  மும்பை
    இந்தியாவில் மேலும் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வட இந்தியாவில் நில அதிர்வு  டெல்லி

    உலகம்

    அலாஸ்கா ஏர்லைன்ஸின் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து  அமெரிக்கா
    அமெரிக்காவின் ஹூதி எதிர்ப்புப் போரில் இணைந்தது இலங்கை  அமெரிக்கா
    'போயிங் 737 MAX 9' விமானங்களில் உள்ள கதவுகளின் போல்ட்கள் லூசாக இருந்ததாக சோதனையில் தகவல்  அமெரிக்கா
    நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தென் கொரியா தென் கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025