NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி

    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 24, 2023
    09:33 am

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யா அதிபர் விலாடிமிர் புட்டினுக்கு எதிராக சதிப்புரட்சி செய்த வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின், நேற்று நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி பயணப்பட்ட அந்த விமானத்தில் இருந்த மேலும் 9 பேரும் உயிரிழந்தனர்.

    இதுபற்றி வாக்னர் படைக்கான அதிகாரபூர்வ டெலிகிராம் சேனல், எவ்ஜெனி பிரிகோஜின் பயணம் செய்த விமானம், ட்வெர் பிராந்தியத்தில், வான் பாதுகாப்பு படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்தது.

    ரஷ்ய விமானப் போக்குவரத்து நிறுவனம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. ரஷ்யா செய்தி நிறுவனமான TASS, "ட்வெர் பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகளில் யெவ்ஜெனி ப்ரிகோஜின் பயணம் செய்தார் என ரோசாவியாட்சியா (ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம்) கூறியது" என்று தெரிவித்துள்ளது.

    card 2

    யாரந்த பிரிகோஜின்?

    ப்ரிகோஜின், ரஷ்யாவின் பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவர்.

    அவர் 1995 முதல், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் துறையில் கோலோச்சிவருபவர்.

    2014-இல் ரஷ்யா கிரிமியாவை ஆக்கிரமித்தபோது, வாக்னர் குழு என்கிற கிளர்ச்சியாளர்கள் குழுவை நிறுவினார் ப்ரிகோஜின்.

    பிரிகோஜின், கடந்த ஆண்டு, ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் போது ஒரு கூலிப்படை குழுவை ரகசியமாக நிறுவி வழிநடத்தியதாக தெரிவித்தார்.

    ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைன் போரில் பங்கெடுத்த இக்குழு, திடீர் திருப்பமாக, ரஷ்யாவிற்கு எதிராக, முக்கிய நகரங்களை கைப்பற்றி அந்நாட்டு அதிபர் புதினுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

    ஒரு கட்டத்தில், தலைநகர் மாஸ்கோ நோக்கி வாக்னர் படை முன்னேறியது. தோல்வியில் முடிந்த அந்த கிளர்ச்சிக்கு பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில், ப்ரிகோஜின் பெலாரசுக்கு நாடு கடத்தப்பட்டார் எனக்கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    விபத்து

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ரஷ்யா

    அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங் உலகம்
    தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா உக்ரைன்
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி உக்ரைன்

    விபத்து

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025