Loading...
7 மாதங்களுக்குப் பின் திடீர் திருப்பம்: ஈரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் ரகசியத் திட்டம்
போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் ரகசியத் திட்டம்

7 மாதங்களுக்குப் பின் திடீர் திருப்பம்: ஈரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் ரகசியத் திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 03, 2026
03:46 pm

செய்தி முன்னோட்டம்

ஈரானுடனான ராணுவ மோதல் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மூத்த அதிகாரிகளுடன் ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இடைத்தேர்தல் வரவிருப்பதாலும், போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதாலும் போரை நிறுத்துவதற்கு ட்ரம்ப் தனக்குள்ளேயே ஆதரவு தெரிவித்து வருகிறார். பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கைவிடும் என்பது அவரது கணிப்பாக உள்ளது. இதற்காக ஈரானின் எண்ணெய், கப்பல் போக்குவரத்து, விண்வெளி மற்றும் டிஜிட்டல் சொத்துகளை இலக்கு வைத்து 'ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற பொருளாதார தடையை அமெரிக்கா அண்மையில் தொடங்கியது.

போர் சூழல்

நீடிக்கும் ராணுவப் பதற்றம்

ட்ரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர விரப்பினாலும், அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மேற்கு ஆசியாவில் கூடுதல் படைகளை அனுப்பி வருகிறார்.

இது இந்த மோதல் அடுத்த ஆண்டும் தொடரக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை அமெரிக்கக் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்கத் தொடர்புடைய மையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 142 பேர் காயமடைந்தனர்.

பாதுகாப்பு

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பு

தாக்குதல்களுக்கு மத்தியிலும், ஹார்முஸ் நீரிணை வழியே 40 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் பாதுகாப்பாக வழிநடத்திக் கடத்தியுள்ளன.

இப்போரில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்தது இதுவே முதன்முறையாகும்.

மேலும், அந்த நீரிணையை சுற்றியுள்ள ஈரானின் ரேடார் அமைப்புகள், வான் பாதுகாப்புத் தளங்கள் மற்றும் ஏவுகணை நிலையங்கள் உள்ளிட்ட 60 ராணுவ இலக்குகளையும் அமெரிக்க படைகள் தகர்த்துள்ளன.

அமெரிக்க அதிபர் போரை திரும்ப பெற விரும்பினாலும், பென்டகன் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை ஆயத்த நிலையில் வைத்திருப்பது இப்போரின் எதிர்காலம் குறித்த குழப்பத்தை நீட்டிக்கச் செய்துள்ளது.

ADVERTISEMENT