LOADING...
அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தான 14 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இதோ!
அமெரிக்கா மற்றும் ஈரான் இன்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தான 14 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இதோ!

எழுதியவர் Venkatalakshmi V
Jun 18, 2026
09:49 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்து எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் இணக்கப்பாட்டின் அசல் நகலை பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். "அமெரிக்கா மற்றும் ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கு இடையிலான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 14 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தின் முழு விவரங்களைச் சர்வதேச ஊடகமான CNN வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ள அந்த 14 முக்கிய ஒப்பந்த விதிகளில் முக்கியமானவை பின்வருமாறு:

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முக்கிய அம்சங்கள்

'இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தின்' முக்கிய அம்சங்கள்

லெபனான் உட்பட அனைத்து முன்னணிப் போர்க் களங்களிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்த அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் கூட்டணி நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை உறுதி செய்யப்படும். அமெரிக்காவும் ஈரானும் ஒருவருக்கொருவர் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும், உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து அதிகபட்சமாக 60 நாட்களுக்குள் இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தத்தை எட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அமெரிக்கா தனது கடல்வழி முற்றுகையை நீக்கத் தொடங்கும். 30 நாட்களுக்குள் முற்றுகை முழுமையாக வாபஸ் பெறப்படும்.

Advertisement

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தியும் மறுசீரமைப்பு நிதியும்

ஈரான் அடுத்த 60 நாட்களுக்கு மட்டும் பெர்சிய வளைகுடாவில் இருந்து ஓமன் கடல் வரை வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு எவ்வித கட்டணமும் இன்றி வழிவகை செய்யும். அடுத்த 30 நாட்களுக்குள் கடல் பகுதியில் உள்ள கண்ணிவெடிகள் மற்றும் ராணுவத் தடைகள் நீக்கப்படும். ஹார்முஸ் ஜலசந்தியின் எதிர்கால நிர்வாகம் குறித்து ஓமன் மற்றும் பிற வளைகுடா நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தும். போரினால் பாதிக்கப்பட்ட ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை அமெரிக்கா தனது பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து உருவாக்கும். இதற்கான நிதிப் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் அமெரிக்கா வழங்கும்.

Advertisement

அணுசக்தித் திட்டம்

அணுசக்தித் திட்டம் மற்றும் யுரேனியம் நீர்த்துப்போகச் செய்தல்

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவோ அல்லது வாங்கவோ கூடாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஈரானிடம் தற்போதுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் நேரடி மேற்பார்வையில், அந்தந்த இடங்களிலேயே அணுசக்திக்கு உதவாதவாறு நீர்த்துப்போகச் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க வேண்டும், கூடுதல் செறிவூட்டல் செய்யக் கூடாது. பதிலுக்கு, அமெரிக்கா புதிய தடைகளை விதிக்காது மற்றும் பிராந்தியத்தில் கூடுதல் படைகளைக் குவிக்காது. சர்வதேச வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்கள் மற்றும் நிதிகளும் உடனடியாக விடுவிக்கப்படும்.

Advertisement