LOADING...
H-1B விசாவிற்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்; இந்திய பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
H-1B விசாவிற்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்

H-1B விசாவிற்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்; இந்திய பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2025
08:04 am

செய்தி முன்னோட்டம்

H-1B விசா திட்டத்தில் ஒரு பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக, டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கான வருடாந்திர கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெளிநாட்டு ஊழியர்களை குறைந்த சம்பளத்தில் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இந்த விசா திட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்கு இந்த நடவடிக்கை முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப், இந்தக் கட்டண உயர்வு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் போன்ற துறைகளில் உண்மையிலேயே திறமையானவர்களை மட்டுமே அமெரிக்காவிற்குள் கொண்டு வர உதவும் என்று தெரிவித்தார்.

அமெரிக்கா

அமெரிக்கா பட்டதாரிகளுக்கு வேலை

வணிகத் துறைச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக், இந்த புதிய கொள்கை நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்து பட்டதாரிகளைப் பயிற்றுவிக்கவும், வெளிநாட்டவர்களைப் பணியமர்த்துவதைத் தவிர்க்கவும் உதவும் என்றார். H-1B விசாக்கள் பொதுவாக சிறப்புத் திறமை உள்ள வெளிநாட்டு வல்லுநர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களுக்கு உதவுகின்றன. ஆனால், அமெரிக்க ஊழியர்களின் சம்பளத்தை விட H-1B விசா உள்ளவர்களின் சம்பளம் குறைவாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தக் கட்டண உயர்வு இந்திய ஊழியர்களைப் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், H-1B விசா பெறுபவர்களில் 71% பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்பூர்வ குடியேற்றங்களை கட்டுப்படுத்த அல்லது அதன் மூலம் வருவாயை ஈட்ட டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.