LOADING...
பிரேசில் COP30 பருவநிலை மாநாட்டில் தீ விபத்து: 21 பேர் காயம்
COP30 பருவநிலை மாநாட்டில் தீ விபத்து

பிரேசில் COP30 பருவநிலை மாநாட்டில் தீ விபத்து: 21 பேர் காயம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 21, 2025
08:35 am

செய்தி முன்னோட்டம்

பிரேசிலின் பெலெம் (Belém) நகரில் நடைபெற்று வரும் COP30 பருவநிலை உச்சி மாநாட்டின் அரங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், முக்கிய பருவநிலை பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டன. இந்த விபத்தில் 21 பேர் காயமுற்றதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது. பெலெமில் உள்ள COP30 மாநாட்டு வளாகத்தில் உள்ள "நீல மண்டலத்திற்கு" (Blue Zone) அருகில் அமைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டின் அரங்கில் (Country Pavilion) இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது, சுமார் 200 நாடுகளின் அமைச்சர்கள், புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் பருவநிலை தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.

வெளியேற்றம்

முக்கியமான பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட தீ விபத்து

சைரன்கள் ஒலிக்கப்பட்டதும், பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு உடனடியாக வெளியேறினர். மாநாட்டு அரங்கிற்குள் தீப்பிழம்புகள் மற்றும் அடர்த்தியான புகை எழுந்தது காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. பிரேசிலின் சுற்றுலாத் துறை அமைச்சர் செல்சோ சபினோ, தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தால் பேச்சுவார்த்தைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இன்று பேச்சுவார்த்தையை தொடர முடியுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்த தீ விபத்து, புதைபடிவ எரிபொருளின் எதிர்காலம், வளரும் நாடுகளுக்கு நிதி உதவி மற்றும் பருவநிலை கொள்கையுடன் இணைக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகள் போன்ற முக்கிய விவகாரங்களில் கருத்தொற்றுமை எட்ட வேண்டிய முக்கியமான நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post