பிரிட்டன் நான்கு துண்டுகளாக உடைகிறதா? சுதந்திரம் கோரி 3 நாட்டு தலைவர்கள் அவசர கூட்டம்
செய்தி முன்னோட்டம்
கார்டிஃப்பில் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டில் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகளின் முதன்மை அமைச்சர்கள் பங்கேற்று சுயநிர்ணய உரிமைக்கான கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளனர். பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் வெஸ்ட்மின்ஸ்டர் ஆட்சிக்கெதிராக இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் முதன்முறையாக ஒன்றாக இணைந்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதன் மூலம் லண்டன் மையப்படுத்திய அதிகாரத்திற்குப் பெரும் சவால் உருவாகியுள்ளது.
டிரம்ப் ஆதரவு
சுதந்திரக் கோரிக்கைகளும் டிரம்பின் ஆதரவும்
ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் ஜான் ஸ்வின்னி மற்றும் வேல்ஸ் முதன்மை அமைச்சர் ருன் ஆப் இயோர்வெர்த் ஆகியோர் தங்கள் நாடுகளுக்குக் கூடுதல் அதிகாரங்களும் சுதந்திர வாக்கெடுப்பும் தேவை என்பதில் உறுதியாக உள்ளனர்.
இதற்கிடையே அயர்லாந்து பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒருங்கிணைந்த அயர்லாந்து உருவாவதை தான் வரவேற்பதாகத் தெரிவித்த கருத்து சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த ஆதரவு வட அயர்லாந்தின் சின் ஃபைன் கட்சிக்குக் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.
எதிர்ப்பும் விளக்கமும்
வெஸ்ட்மின்ஸ்டர் எதிர்ப்பும் பிரதமர் பர்ன்ஹாமின் விளக்கமும்
ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பு குறித்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் நாடாளுமன்றத்தில் பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போதைக்கு எந்த ஒரு வாக்கெடுப்பும் நடைபெறாது என அவர் கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளார்.
வரும் பொதுத்தேர்தல் வரை சுதந்திர வாக்கெடுப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை என்றும், மக்களின் வாழ்க்கை செலவைக் குறைப்பதே அரசின் முதன்மை இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், பிரிட்டனின் தற்போதைய அரசியல் அமைப்பு முடங்கிவிட்டதாக சுதந்திர ஆதரவுத் தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மை
இந்த கார்டிஃப் மாநாட்டில் வெறும் சுதந்திரக் கோரிக்கை மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது, ஆற்றல் துறை மற்றும் வர்த்தகக் கூட்டாண்மை குறித்தும் தலைவர்கள் ஒப்பந்தம் செய்யவுள்ளனர்.
வேல்ஸ் நாடு தனது கடலோர விண்ட் மில் வருவாய் மற்றும் வரிக் கொள்கைகளில் லண்டனிடமிருந்து கூடுதல் அதிகாரங்களைக் கேட்கிறது.
பிரிட்டனின் 4 உறுப்பு நாடுகளில் 3 நாடுகள் சுதந்திரத்திற்கு ஆதரவாக மாறுவது, ஐக்கிய ராஜ்யம் (UK) தனது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் தற்போது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.