ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்ததை நீடிப்பதாக டிரம்ப் அறிவிப்பு; பின்னணியில் பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிகிற கெடுவிற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று இந்த முக்கிய முடிவை டிரம்ப் எடுத்துள்ளார். டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரின் நேரடி வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஈரானிய அரசாங்கம் தற்போது பிளவுபட்டுள்ள நிலையில், அந்த நாட்டுத் தலைவர்கள் ஒருங்கிணைந்த ஒரு சமாதானத் திட்டத்தை முன்வைக்கும் வரை அமெரிக்கா தனது ராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் என்று டிரம்ப் உறுதி அளித்துள்ளார். இதற்காகப் பாகிஸ்தான் பிரதமர் டிரம்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
On my personal behalf and on behalf of Field Marshal Syed Asim Munir, I sincerely thank President Trump for graciously accepting our request to extend the ceasefire to allow ongoing diplomatic efforts to take their course.
— Shehbaz Sharif (@CMShehbaz) April 21, 2026
With the trust and confidence reposed in, Pakistan…
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
STATEMENT BY PRESIDENT DONALD J. TRUMP: pic.twitter.com/ATdRyY1qqK
— The White House (@WhiteHouse) April 21, 2026
முற்றுகை
தடையற்ற கடல்வழி முற்றுகை
போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை (Blockade) தொடரும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். "எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் முழுத் தயார் நிலையில் இருக்கும்; பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரும் வரை இந்த முற்றுகை நீடிக்கும்" என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதேசமயம், இஸ்லாமாபாத் செல்லவிருந்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு வாஷிங்டனிலேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு
ஈரானின் கடும் எதிர்ப்பு மற்றும் சதி சந்தேகம்
அமெரிக்காவின் இந்த முற்றுகையை "யுத்தப் பிரகடனம்" என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி சாடியுள்ளார். வர்த்தகக் கப்பல்களைத் தடுத்து நிறுத்துவது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப்பின் ஆலோசகர் பேசுகையில், "டிரம்பின் இந்த போர்நிறுத்த நீட்டிப்பு என்பது எதிர்பாராத ஒரு தாக்குதலை நடத்துவதற்காக நேரம் வாங்கும் தந்திரம்" என்று எச்சரித்துள்ளார். இதன் காரணமாக, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்கப்போவதில்லை என்று தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் "அதிகப்படியான கோரிக்கைகள்" காரணமாகப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று ஈரான் கருதுகிறது.