NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள்
    தாலிபான் தீவிரவாதக் குழு காபூலைக் கைப்பற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2021இல் இந்தியத் தூதரகம் மூடப்பட்டது

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 14, 2023
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இன்று(மார் 14) தொடங்கும் "இந்தியா இம்மெர்ஸன்" ஆன்லைன் பாடத்திட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

    இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) என்ற வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (MEA) பிரிவால் இந்த கோர்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த கோர்ஸில் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். மேலும், இது வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.

    இந்தியா இதுவரை தாலிபான் அரசாங்கத்தை ஒரு அரசாங்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

    தாலிபான் தீவிரவாதக் குழு காபூலைக் கைப்பற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2021இல் இந்தியத் தூதரகம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இது ஜூன் 2022 இல் மீண்டும் திறக்கப்பட்டது.

    இந்தியா

    உலக நாடுகளை சேர்ந்த 30 பேர் பங்கேற்க உள்ளனர்

    இன்று தொடங்கும் இந்த ஆன்லைன் பாடத்தில் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

    இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கூட்டாளிகளாக இருக்கும் அனைத்து நாடுகளும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கோர்ஸின் மூலம் இந்தியாவின் பொருளாதார சூழல், கலாச்சார பாரம்பரியம், சமூக பின்னணி மற்றும் பலவற்றை கற்றுக்கொள்ளலாம் என்று இந்த கோர்ஸின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    ITEC இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி, அரசாங்க அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்முனைவோர் போன்றவர்கள் 30 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உலகம்

    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்தியா
    மாபெரும் சூப்பர்நோவாக்களின் படங்களை பகிர்ந்த நாசா நாசா
    ஷெங்கன் விசா பெறுவதற்கு கடினமான நடைமுறைகளை பின்பற்றும் 5 நாடுகள் சுற்றுலா

    இந்தியா

    தங்கம் விலை 2வது நாளாக கடும் உயர்வு - இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    சூப்பர் மாடல் பைக்கை அறிமுகப்படுத்திய கவாஸாகி நிறுவனம்! பைக் நிறுவனங்கள்
    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது டெல்லி
    இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி பதவி விலகல்! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025