NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி
    தம்பதியர் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கோராயாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 28, 2023
    05:05 pm

    செய்தி முன்னோட்டம்

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியர் சனிக்கிழமை அன்று(மார்-25) அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    சுக்விந்தர் சிங்(41) மற்றும் அவரது மனைவி கிரண்தீப் கவுர்(33) ஆகியோர் தங்கள் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    இருவரும் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கோராயாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    சனிக்கிழமை இரவு சுக்விந்தர் வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் தம்பதியினரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது.

    முதலில் சுக்விந்தரை பலமுறை துப்பாக்கியால் சுட்ட அந்த மர்ம நபர், அதன் பின், கிரண்தீப் மீது இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார். இதனால், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மணிலா

    இரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பதியர்

    சுக்விந்தர் 19 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸில் குடியேறி, நிதி தொடர்பான தொழில் நடத்தி வந்தார்.

    அவர் கிரண்தீப்பை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் என்றும் ஐந்து மாதங்களுக்கு முன்பு கிரண்தீப் மணிலாவுக்குச் சென்றார் என்றும் கூறப்படுகிறது.

    சுக்விந்தரின் மூத்த சகோதரர் லக்வீர் சிங் செய்தியாளர்களிடம், "ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நாங்கள் அவனுக்கு பலமுறை தொடர்பு கொண்டோம், ஆனால் அவன் பதிலளிக்கவில்லை. அதனால், நான் என் மாமாவிடம் ஒருமுறை அவனை வீட்டில் சென்று பார்த்துவிட்டு வருமாறு கூறினேன். அங்கு என் சகோதரனும் அவனுடைய மனைவியும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை என் மாமா கண்டிருக்கிறார்." என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உலகம்

    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலக செய்திகள்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலக செய்திகள்
    இதென்ன ஆச்சரியம்! கொண்டாடும் நாட்களில் கூட ஒரு உணவுச்சங்கிலி இணைப்பு வருகிறதே! வைரல் செய்தி
    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025