NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தன்பாலின ஈர்ப்பாளர்கள் கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்
    தாக்குதல்காரர்கள் அவரது விரலை உடைத்து, அவருக்கு மொட்டை அடித்திருந்தனர்.

    தன்பாலின ஈர்ப்பாளர்கள் கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 05, 2023
    12:26 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யாவின் தெற்குப் பகுதியான செச்சினியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய 'நோவாயா கெஸட்டா' செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் எலெனா மிலாஷினா நேற்று(ஜூலை 4) முகமூடி அணிந்த நபர்களால் தாக்கப்பட்டார்.

    போனை திறப்பதற்கான பாஸ்வேர்டை கொடுக்கவில்லை என்றால் விரல்களை வெட்டி விடுவோம் என்று தாக்கியவர்கள் அவரை மிரட்டியுள்ளனர்.

    எலெனா மிலாஷினாவும் அவரது வழக்கறிஞர் அலெக்சாண்டர் நெமோவ்வும் செச்சினியாவின் க்ரோஸ்னியில் மனித உரிமை ஆர்வலர் ஒருவரின் வழக்கு விசாரணையில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது தாக்கப்பட்டனர்.

    இந்த தாக்குதலால், எலெனாவுக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டது. தாக்குதல்காரர்கள் அவரது விரலை உடைத்து, அவருக்கு மொட்டை அடித்திருந்தனர்.

    இதனால், எலெனா அடிக்கடி சுயநினைவை இழந்தார். தாக்குதல்காரர்கள் அவரது முகத்தில் பச்சை பெயிண்ட்டையும் பூசி அவரை அவமானப்படுத்த முயற்சித்திருந்தனர்.

    டஞ்சாபி

    2020ஆம் ஆண்டிலும் எலெனாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது

    "அவர்கள் டிரைவரை காரிலிருந்து வெளியே தூக்கி எறிந்துவிட்டு. காருக்குள் ஏறி, என் கைகளைக் கட்டி போட்டுவிட்டு, என்னை முட்டி போட வைத்து, என் தலையில் துப்பாக்கியை வைத்தனர்." என்று எலெனா வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதற்கு முன், எலெனா மிலாஷினாவை "பயங்கரவாதி" என்று முத்திரை குத்திய செச்சினியா தலைவர் ரம்ஜான் கதிரோவ், பிராந்திய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்றும், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

    எலெனாவுக்கு எதிராக பல மனித உரிமை மீறல்களும் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் இதற்குமுன் நடத்தப்பட்டிருக்கிறது.

    2020ஆம் ஆண்டில், எலெனாவும் அவருடன் சென்ற ஒரு வழக்கறிஞரும் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர்.

    கடந்த ஆண்டு, செச்சென் அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதால், எலெனா தற்காலிகமாக ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்

    ரஷ்யா

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உக்ரைன்

    உலகம்

    துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்? துபாய்
    இந்தியா-அமெரிக்கா இடையே மெகா ஜெட் எஞ்சின் ஒப்பந்தம் இந்தியா
    அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் பெண் பெயர் கொண்ட சூறாவளிகள், புதிய ஆய்வு முடிவுகள் சூறாவளி
    இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்: யாரிந்த பிலிப் கிரீன் இந்தியா

    உலக செய்திகள்

    இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர் இந்தியா
    சோவியத் கால அணை தகர்க்கப்பட்டது: உக்ரைனில் பெரும் வெள்ளம் உலகம்
    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்  உலகம்
    உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025