NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம்

    பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 18, 2024
    10:43 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் திங்களன்று தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார்.

    அமெரிக்கக் குடிமகனான பன்னுனைக் கொலை செய்ய இந்திய அரசாங்கம் நியமித்த அடியாள் தான் நிகில் குப்தா என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அவர் கடந்த ஆண்டு செக் குடியரசில் கைது செய்யப்பட்டார்.

    52 வயதான குப்தா சமீபத்தில் செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

    இந்நிலையில், குப்தா ஒரு அமெரிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

    அமெரிக்கா 

    ஜூன் 28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது 

    இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஜூன் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. நிகில் குப்தா அப்போது மீண்டும் ஆஜராவார்.

    எனினும் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    அவரது வழக்கறிஞர் ஜெஃப்ரி சாப்ரோ, இந்த வழக்கை "சிக்கலானது" என்று விவரித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் தீவிரமான தற்காப்பைத் தொடரப்போவதாகவும் ஜெஃப்ரி சாப்ரோ கூறியுள்ளார்.

    இதற்கிடையில், செக் குடியரசு காவல்துறை, நிகில் குப்தாவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் போது எடுக்கப்பட்ட முதல் வீடியோ காட்சிகளை சமூக ஊடக தளமான X இல் பகிர்ந்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    நிகில் குப்தாவின் வீடியோ காட்சி 

    Od pátku je cizinec podezřelý v USA ze spiknutí za účelem spáchání nájemné vraždy v rukou americké justice. Spolupráce policistů cizinecké policie, ředitelství pro mezinárodní policejní spolupráci a kolegů z USA umožnilo bezpečnou extradici z pražského letiště. #policiepp pic.twitter.com/492NKyltjd

    — Policie ČR (@PolicieCZ) June 17, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    அமெரிக்கா

    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம்  இஸ்ரேல்
    காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல அடியாளை நியமித்தாரா இந்திய அதிகாரி? இந்தியா பதில் இந்தியா
    சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொலை கொலை
    உக்ரைன் போரில், உலகளாவிய இரசாயன ஆயுதங்கள் தடையை ரஷ்யா மீறியதா? உக்ரைன்

    இந்தியா

    UFCயில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் புஜா தோமர்  பிரேசில்
    பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள்  பிரதமர் மோடி
    மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு  பிரதமர் மோடி
    3வது முறையாக பிரதமர் ஆன நரேந்திர மோடியின் முதல் உத்தரவு என்ன தெரியுமா? பிரதமர் மோடி

    உலகம்

    வீடியோ: ஸ்பெயின், போர்ச்சுகலில் வானை ஒளிர செய்தது மாபெரும் விண்கல் பொழிவு ஸ்பெயின்
    ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து: மீட்புக் குழுக்கள் இன்னும் வராததால் பதட்டம்  ஈரான்
    ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது ஈரான்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவை தொடர்ந்து, முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார் ஈரான்

    உலக செய்திகள்

    2000 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஈரான் அதிபரின் உடல்: உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்  ஈரான்
    ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா ஈரான்
    ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல்  இஸ்ரேல்
    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025