NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
    மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
    உலகம்

    மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    September 10, 2023 | 10:47 am 0 நிமிட வாசிப்பு
    மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
    ஆறு தசாப்தங்களுக்கு பிறகு, அந்நாட்டில் பதிவாகும் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.

    6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மத்திய மொராக்கோவில் ஏற்பட்டது. மராகேஷிலிருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,059 பேர் காயமடைந்தனர். ஆறு தசாப்தங்களுக்கு பிறகு, அந்நாட்டில் பதிவாகும் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். இந்த பயங்கரமான பேரழிவை அடுத்து, மொராக்கோவில் நடைபெறும் மீட்பு பணிகளில் உதவ பல உலக நாடுகளும் உதவி கரம் நீட்டியுள்ளன. மொராக்கோவின் அண்டை நாடான அல்ஜீரியாவும் தனது உதவி கரத்தை நீட்டியுள்ளது. இந்த இரண்டு நாடுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களது இரு தரப்பு உறவை துண்டித்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    மொராக்கோவுக்கு துணை நிற்கும் உலக நாடுகள் 

    பல தசபதங்களாக அழியாத பகை இருந்தபோதிலும், தனது அண்டை நாடான மொராக்கோவிற்கு மனிதாபிமான உதவியை வழங்க அல்ஜீரியா முன்வந்துள்ளது. மொராக்கோவின் மருத்துவ மற்றும் அவசர விமானங்கள் பயணிக்க தனது வான்வெளியை திறக்க அல்ஜீரியா முன்வந்துள்ளது. அல்ஜீரியா மற்றும் மொராக்கோ இடையேயான எல்லை 1994ஆம் ஆண்டு முற்றிலுமாக மூடப்பட்டது. அல்ஜீரியாவின் வான்வெளி 2021 முதல் மூடப்பட்டது. இது தவிர, துருக்கி, கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி,இஸ்ரேல், கத்தார், துபாய் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளும் மொராக்கோவிற்கு தற்போது உதவி செய்து வருகின்றன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த இக்கட்டான நேரத்தில் மொராக்கோவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று கூறியிருந்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆப்பிரிக்கா
    நிலநடுக்கம்

    ஆப்பிரிக்கா

    மொராக்கோ பூகம்பம்: பலி எண்ணிக்கை 820ஆக உயர்வு  நிலநடுக்கம்
    ஜி20 - 21வது நிரந்தர உறுப்பு நாடாக இணைந்தது ஆப்பிரிக்க யூனியன் இந்தியா
    மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி நிலநடுக்கம்
    மாலி நாட்டில் பயங்கரவாத துப்பாக்கி சூடு: 21 பொதுமக்கள் பலி உலக செய்திகள்

    நிலநடுக்கம்

    ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஜம்மு காஷ்மீர்
    ஜெய்ப்பூர்: அரை மணிநேரத்தில் தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள் ராஜஸ்தான்
    அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை  அமெரிக்கா
    டெல்லி உட்பட வட இந்திய பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023