NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு  
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு  
    இந்த 135 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜித்தாவை தற்போது அடைந்துள்ளனர்.

    ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு  

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2023
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    போர்க்களமாக மாறியுள்ள சூடானில் இருந்து இன்று(ஏப் 26) புறப்பட்ட IAF C-130J விமானத்தில் 135 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

    இந்த 135 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜித்தாவை தற்போது அடைந்துள்ளனர்.

    இதற்கு முன் மீட்கப்பட்ட, 2வது பேட்ச்சை சேர்ந்த 148 இந்தியர்களை ஜித்தாவில் வைத்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றார்.

    கடற்படை கப்பல் INS சுமேதா இன்று 278 பயணிகளுடன் ஜித்தா துறைமுகத்தை சென்றடைந்தது.

    "ஆபரேஷன் காவேரி முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இரண்டாவது IAF C-130J விமானம் போர்ட் சூடானில் இருந்து மேலும் 135 பயணிகளுடன் ஜித்தாவிற்கு புறப்பட்டது. ஆபரேஷன் காவேரியின் கீழ் வெளியேற்றப்பட்டவர்களின் மூன்றாவது குழு இது" என்று இந்திய வெளியுறவுத்துறை ட்வீட் செய்துள்ளது.

    details

    இந்திய கடற்படையின் INS Teg செவ்வாயன்று 'ஆபரேஷன் காவேரி'யில் இணைந்தது

    செவ்வாயன்று, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர், ஜித்தாவில் இருக்கும் சர்வதேச இந்தியப் பள்ளியில் உள்ள போக்குவரத்து வசதியை ஆய்வு செய்தார்.

    சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள், இந்தியாவுக்கு வருவதற்கு முன், இங்கு தான் சிறிது காலத்திற்கு தங்க வைக்கப்பட்டிருப்பார்கள்.

    சூடான் தலைநகர் கார்ட்டூமில் அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவக் குழுக்களுக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு ஆபரேஷன் காவேரி தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் முதல் நடவடிக்கையாக 500 இந்தியர்கள் போர்ட் சூடானை அடைந்திருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.

    சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணியில் உதவுவதற்கு இந்திய கடற்படையின் INS Teg செவ்வாயன்று 'ஆபரேஷன் காவேரி'யில் இணைந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    சூடான் மோதல்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    குடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம்  நாக்பூர்
    காலநிலை மாற்றம்: இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள்  டெல்லி
    வடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம்  திரிபுரா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் டெல்லி

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    சூடான் மோதல்கள்

    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் ஜப்பான்
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா இந்தியா
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  சூடான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025