Loading...
நேபாளத்தில் இடிபாடுகளுக்குள் கேட்ட மனிதக் குரல்கள்: உயிர்தப்பிய திரிசூலி 3A மின் நிலைய சுரங்க தொழிலாளர்கள்?
நீர்மின் நிலைய சுரங்கப்பாதையின் ஆழமான பகுதியிலிருந்து மனிதக் குரல்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

நேபாளத்தில் இடிபாடுகளுக்குள் கேட்ட மனிதக் குரல்கள்: உயிர்தப்பிய திரிசூலி 3A மின் நிலைய சுரங்க தொழிலாளர்கள்?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 04, 2026
09:31 am

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய அதிதீவிர வெள்ளத்திற்குப் பிறகு, திரிசூலி 3A நீர்மின் நிலைய சுரங்கப்பாதையின் ஆழமான பகுதியிலிருந்து மனிதக் குரல்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் மத்தியில் மீட்பு குறித்த புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆரம்பத்திலிருந்தே மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் பொறியாளருமான ஸ்ரீ ராம் நெவ்பானே வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், சுரங்கப்பாதையின் உட்பகுதியிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் குரல்கள் தெளிவாகக் கேட்டதாகத் தெரிவித்துள்ளார். "அஞ்ச வேண்டாம், நாங்கள் உங்களை மீட்கிறோம்" என்று மீட்புக் குழுவினர் கூறியபோது, அதற்குச் சுரங்கத்தின் உட்புறத்திலிருந்து பதில் குரல் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீட்புப் பணிகள்

தீவிரமடையும் ராணுவத்தின் மீட்புப் பணிகள்

நேபாள ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய காவல் படையினர் ஹெவி மெஷினரிகள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்திச் சுரங்கப்பாதையை அடைத்துள்ள சேறு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ரசுவாவில் உள்ள லாங்டாங் கோலா நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையின் 150 மீட்டர் ஆழத்திற்குச் சென்று மீட்புக் குழுவினர் நடத்திய ஆய்வில் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த இயற்கை பேரிடரில் தற்போதைய நிலவரப்படி 1,259 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும், நாட்டின் 6 நீர்மின் நிலையங்களில் பணியாற்றிய 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 5,053 பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரிசூலி 3A திட்டப் பகுதியில் மட்டும் 40 தொழிலாளர்கள் வரை இன்னும் கண்டறியப்படாமல் உள்ளதால், குடும்பத்தினர் காத்துக் கிடக்கின்றனர்.

ADVERTISEMENT