Page Loader
மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு
மியான்மரில் முடிவுக்கு வருகிறது ராணுவ ஆட்சி

மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 08, 2025
06:26 pm

செய்தி முன்னோட்டம்

மியான்மரின் ராணுவ அரசாங்கம் அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. ஜனவரி 2026 க்குள் வாக்களிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெலாரஸுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின்போது மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் வெளியிட்ட இந்த அறிவிப்பு, பிப்ரவரி 2021 இல் ஆங் சான் சூகியின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ராணுவம் வெளியேற்றிய கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது. 53 அரசியல் கட்சிகள் ஏற்கனவே தங்கள் பங்கேற்பு பட்டியலை சமர்ப்பித்துள்ளன. ஆனால், சரியான தேர்தல் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ராணுவத் தலைவர் கூறினார்.

உள்நாட்டு சண்டை

உள்நாட்டு சண்டைக்கு மத்தியில் தேர்தல்

மியான்மர் பரவலான மோதலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், ஜனநாயக சார்பு எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக ராணுவம் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இருக்க வாய்ப்பில்லாத ஒரு தேர்தல் செயல்முறை மூலம் அதன் ஆட்சியை சட்டப்பூர்வமாக்க ராணுவத்தின் முயற்சியாக இந்த நடவடிக்கையை நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கினிடையே, ஆயுதமேந்திய போராளிக் குழுக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வருவதால் உள்நாட்டு சண்டையும் தீவிரமடைந்து உள்ளது. தற்போது நாட்டின் பாதிக்கும் குறைவான பகுதியையே ராணுவம் ஆட்சி செய்கிறது. மேலும், அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே தேர்தல்கள் நடத்தப்படும் என்று முன்னர் குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் இருப்பதால், ஜெனரல்களின் அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக தேர்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.