NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு
    மியான்மரில் முடிவுக்கு வருகிறது ராணுவ ஆட்சி

    மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 08, 2025
    06:26 pm

    செய்தி முன்னோட்டம்

    மியான்மரின் ராணுவ அரசாங்கம் அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

    ஜனவரி 2026 க்குள் வாக்களிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெலாரஸுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின்போது மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் வெளியிட்ட இந்த அறிவிப்பு, பிப்ரவரி 2021 இல் ஆங் சான் சூகியின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ராணுவம் வெளியேற்றிய கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது.

    53 அரசியல் கட்சிகள் ஏற்கனவே தங்கள் பங்கேற்பு பட்டியலை சமர்ப்பித்துள்ளன. ஆனால், சரியான தேர்தல் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ராணுவத் தலைவர் கூறினார்.

    உள்நாட்டு சண்டை

    உள்நாட்டு சண்டைக்கு மத்தியில் தேர்தல்

    மியான்மர் பரவலான மோதலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், ஜனநாயக சார்பு எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக ராணுவம் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இருக்க வாய்ப்பில்லாத ஒரு தேர்தல் செயல்முறை மூலம் அதன் ஆட்சியை சட்டப்பூர்வமாக்க ராணுவத்தின் முயற்சியாக இந்த நடவடிக்கையை நிபுணர்கள் கருதுகின்றனர்.

    இதற்கினிடையே, ஆயுதமேந்திய போராளிக் குழுக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வருவதால் உள்நாட்டு சண்டையும் தீவிரமடைந்து உள்ளது. தற்போது நாட்டின் பாதிக்கும் குறைவான பகுதியையே ராணுவம் ஆட்சி செய்கிறது.

    மேலும், அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே தேர்தல்கள் நடத்தப்படும் என்று முன்னர் குறிப்பிட்டுள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் இருப்பதால், ஜெனரல்களின் அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக தேர்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மியான்மர்
    தேர்தல்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    விபத்தில் சிக்கிய அகமதாபாத் விமானத்தில் முன்னாள் முதல்வரும் பயணம்? இதுவரை வெளியான தகவல்கள் அகமதாபாத்
    அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழா; பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பங்கேற்க உள்ளதாக தகவல் பாகிஸ்தான் ராணுவம்
    மேம்பட்ட அம்சங்களுடன் வந்துள்ள ஆண்ட்ராய்டு 16; சிறப்பம்சங்கள் என்ன? கூகுள்
    2029 தேர்தல்களில் 33% பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது இட ஒதுக்கீடு

    மியான்மர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மணிப்பூர்
    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம் மணிப்பூர்
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  உலகம்
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா

    தேர்தல்

    2026 சட்டசபை தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணியா? விஜய்யின் தவெக கூறுவது என்ன? தவெக
    சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிராவில் வாக்குப்பதிவு துவங்கியது தேர்தல் ஆணையம்
    மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவு; வெற்றி யாருக்கு? மகாராஷ்டிரா
    மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; வெல்லப்போவது யார்? தேர்தல் முடிவு

    உலகம்

    அரசியலமைப்பின் 49.3 பிரிவை பயன்படுத்த முடிவு; பிரதமர் அறிவிப்பால் கொந்தளிப்பான நிலையில் பிரான்ஸ் அரசியல் சூழல் பிரான்ஸ்
    மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் பலி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    உலக ஃபயர்பவர் இன்டெக்ஸ் 2025; ராணுவ வலிமை மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் இந்தியா
    சர்வதேச நீதிமன்றத்திற்கு அமெரிக்காவில் தடை விதித்தார் டொனால்ட் டிரம்ப்  டொனால்ட் டிரம்ப்

    உலக செய்திகள்

    மார்ச் மாதம் மீண்டும் ஹமாஸுக்கு எதிராக போரை தொடங்க வேண்டும்; இஸ்ரேல் பிரதமருக்கு நெருக்கடி பெஞ்சமின் நெதன்யாகு
    அமெரிக்காவில் காணாமல் போன விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் சடலமாக கண்டெடுப்பு; அமெரிக்க கடலோர காவல்படை தகவல் அமெரிக்கா
    ஜோ பைடன் சட்டத்தின் மூலமே அவருக்கு செக் வைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    விசா சர்ச்சைக்கு மத்தியில் பிரிட்டன் இளவரசர் ஹாரியின் நாடு கடத்தலை நிராகரித்தார் டிரம்ப் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025