NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய முகமது யூனுஸ்; பங்களாதேஷில் இந்துக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய முகமது யூனுஸ்; பங்களாதேஷில் இந்துக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்
    பிரதமர் நரேந்திர மோடி

    பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய முகமது யூனுஸ்; பங்களாதேஷில் இந்துக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 16, 2024
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல்முறையாக பேசினார்.

    அவர்களின் கலந்துரையாடலின் போது, ​​ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான பங்களாதேஷிற்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

    பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கும் முகமது யூனுஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்தார்.

    பங்களாதேஷில் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சமீபத்திய அறிக்கைகளைத் தொடர்ந்து அவர் இந்த உத்தரவாதத்தை கொடுத்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி முன்பு கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் பதிவு

    Received a telephone call from Professor Muhammad Yunus, @ChiefAdviserGoB. Exchanged views on the prevailing situation. Reiterated India's support for a democratic, stable, peaceful and progressive Bangladesh. He assured protection, safety and security of Hindus and all…

    — Narendra Modi (@narendramodi) August 16, 2024

    ஷேக் ஹசீனா ஆட்சி

    முடிவுக்கு வந்த ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகள் பதவிக்காலம்

    பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால பதவிக்காலம் ஆகஸ்ட் 5 அன்று திடீரென முடிவுக்கு வந்தது.

    அவரது அரசாங்கத்திற்கு எதிரான வன்முறை எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அவர் ராஜினாமா செய்தார்.

    ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பங்களாதேஷில் குறைந்தது இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 205 தாக்குதல்களை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து வீடுகள், கடைகள் மற்றும் கோவில்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், டாக்காவில் உள்ள ஷாபாக் சந்திப்பை இந்துக்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    பிரதமர் மோடி
    உலக செய்திகள்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    பங்களாதேஷ்

    BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்  ஆசிய கோப்பை
    BANvsPAK: இலக்கை எளிதாக சேஸ் செய்து போட்டியை வென்றது பாகிஸ்தான் ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை, SLvsBAN: டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கும் வங்கதேசம் ஆசிய கோப்பை
    SlvsBAN: வங்கதேசத்திற்கு குறைவான இலக்கை நிர்ணயித்திருக்கும் இலங்கை ஆசிய கோப்பை

    பிரதமர் மோடி

    மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்  இந்தியா
    'நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம்': நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேச்சு  இந்தியா
    நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பிரதமர் மோடி  மக்களவை
    நாடாளுமன்றத்தில் கைகுலுக்கி தோழமையை வெளிப்படுத்திய மோடி, ராகுல் காந்தி; வைரலாகும் வீடியோ நாடாளுமன்றம்

    உலக செய்திகள்

    ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது தாய்லாந்து  தாய்லாந்து
    பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம்  கனடா
    குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம்  குவைத்
    வேலையாட்களை சுரண்டியதற்காக இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025