NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் நடுவானில் உயிரிழந்த விமானி; 279 பயணிகளுடன், விமானம் பத்திரமாக தரையிறக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் நடுவானில் உயிரிழந்த விமானி; 279 பயணிகளுடன், விமானம் பத்திரமாக தரையிறக்கம்
    அமெரிக்காவில் நடுவானில் உயிரிழந்த விமானி

    அமெரிக்காவில் நடுவானில் உயிரிழந்த விமானி; 279 பயணிகளுடன், விமானம் பத்திரமாக தரையிறக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2023
    01:24 pm

    செய்தி முன்னோட்டம்

    விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதை ஓட்டிச் சென்ற 25 வருட அனுபவம் வாய்ந்த விமானி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 14) இரவு 10.11 மணிக்கு அமெரிக்காவின் மியாமியில் இருந்து 279 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் லட்டம் ஏர்லைன்ஸ் விமானம் சிலிக்கு கிளம்பியது.

    விமானம் கிளம்பி சுமார் மூன்று மணி நேரம் கழித்து விமானிகளில் ஒருவரான கேப்டன் இவான் ஆண்டர் அசௌகரியமாக உணர்ந்ததை அடுத்து கழிவறைக்கு சென்றுள்ளார்.

    எனினும் அங்கிருந்து அவர் திரும்பி வராத நிலையில், ஊழியர்கள் சோதனை செய்ததில் அவர் மயக்கமடைந்து கிடந்துள்ளார்.

    இதையடுத்து, விமானம் அவசரமாக அருகில் இருந்த பனாமா நகரின் டோகுமென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    LATAM airlines mourns

    லட்டம் ஏர்லைன்ஸ் நிறுவனம் இரங்கல்

    விமான நிலையத்தில் கேப்டன் இவான் ஆண்டரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

    விமானியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து லட்டம் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஏர்லைன்ஸ் குழுமம், நேற்று மியாமி-சாண்டியாகோ வழித்தடத்தில் இருந்த எல்ஏ505 விமானம், கட்டளைக் குழுவின் மூன்று உறுப்பினர்களில் ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை காரணமாக பனாமாவில் உள்ள டோகுமென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது.

    விமானம் தரையிறங்கியபோது, அவசரகால சேவைகள் உயிர்காக்கும் உதவியை வழங்கின. ஆனால் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்." எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், கேப்டன் தனது தொழிலில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், விமான சேவைக்கு அவர் அளித்த விலைமதிப்பற்ற பங்களிப்பு நிறுவனத்திற்கு பெரும் சொத்தாக இருக்கும் என்றும் விமான நிறுவனம் கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    விமானம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    அமெரிக்கா

    அமெரிக்காவில் வெளியாகும் 'Project-K' படம் குறித்த அப்டேட்ஸ்  பிரபாஸ்
    வேற்றுகிரக விண்வெளிப் பொருட்களைக் கண்டறிந்த ஹார்வார்டு ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி
    ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி உலகம்
    அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை  உலகம்

    விமானம்

    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன? விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம் மன ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025