LOADING...
பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக அறிவித்த ஒரே நாடு; ஐநாவில் பாகிஸ்தானை பங்கம் பண்ணிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
ஐநா சபையில் வைத்து பாகிஸ்தானை பங்கம் பண்ணிய ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக அறிவித்த ஒரே நாடு; ஐநாவில் பாகிஸ்தானை பங்கம் பண்ணிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2025
08:32 am

செய்தி முன்னோட்டம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் (UNGA) இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார். பாகிஸ்தானின் பெயர் குறிப்பிடாமல், பயங்கரவாதத்தை வெளிப்படையாகத் தனது அரசின் கொள்கையாக அறிவித்துள்ள ஒரே நாடு அதுதான் என்று அவர் சாடினார். உலகளாவிய சமூகம் ஒன்றிணைந்துள்ள நிலையில், இந்த ஒரே ஒரு நாடு மட்டும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்து, அவர்களுக்கு நிதி வழங்கி, ஆயுதம் அளித்து, பயிற்சி அளித்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் சர்வதேச அரங்கில் பாதுகாக்கப்படுவதாகக் கூறிய அவர், ஐநாவின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறுவோருக்கு எதிராக ஐநா சபை வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஒத்துழைப்பு

தீவிரவாதத்திற்கு எதிராக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு

தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகளை ஒன்றிணைப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளைப் பற்றிப் பேசிய இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்தும், சர்வதேசச் சவால்களைச் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தையும் குறித்துப் பேசினார். அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் உரை, இந்தியா தனது தேசிய நலன்களைக் காப்பதிலும், உலக அரங்கில் பொறுப்புள்ள நாடாகத் திகழ்வதிலும் உறுதியாக உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியது. இதன் மூலம், தீவிரவாதத்தை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் இடமில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாடு மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.