NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் 

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2024
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தோனேசியாவில் புதன்கிழமை ருவாங் எரிமலை வெடித்து சிதறியதால் வானில் ஆயிரக்கணக்கான அடி உயரம் வரை சாம்பல் பரவியது. அதனால், இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

    இந்தோனேசியாவின் பல பகுதிகளில் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை காரணமாக 11,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலையில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது ஐந்து பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

    எனவே, உயர்ந்த எரிமலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமை குறைந்தது 800 குடியிருப்பாளர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர்

    இந்தோனேசியா

    இந்தோனேசியா விமான நிலையம் மூடல் 

    இந்தோனேசியாவின் மவுண்ட் ருவாங் புதன்கிழமை பல முறை வெடித்தது. எனவே, உயர்ந்த எரிமலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அந்த எரிமலை ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் எரிமலைக்குழம்புகளை உமிழ்ந்தது. இதனால், அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மவுண்ட் ருவாங் வடக்கு சுலவேசி மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதி எரிமலை வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ள ஒரு பகுதியாகும்.

    இது முதலில் செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9:45 மணிக்கு வெடித்தது. பின்னர் புதன்கிழமை முழுவதும் நான்கு முறை வெடித்தது.

    எனவே, ருவாங் எரிமலையிலிருந்து குறைந்தது 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் இருக்குமாறு அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளையும் மற்றவர்களையும் வலியுறுத்தியுள்ளனர்.

    ருவாங்கின் தொடர்ச்சியான வெடிப்புகளுக்குப் பிறகு அதிகாரிகள் இந்தோனேசியா விமான நிலையத்தையும் மூடியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தோனேசியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தோனேசியா

    இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்லும்பொழுது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் சுற்றுலா
    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  சென்னை
    இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு  உலக செய்திகள்
    இந்தோனேசியா ஓபன் 2023 : இந்தியாவின் பிரணாய் எச்.எஸ்., சாத்விக் & சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம் பிரணாய் எச்.எஸ்.
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025