NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது 

    இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2024
    05:10 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    இஸ்ரேல், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவில் உள்ள பல பல்கலைகழகங்களில் நேற்று பெரும் போராட்டங்கள் நடந்தன.

    அப்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழக முற்றத்தில் முகாமிடுவதற்காக போராட்டக்காரர்கள் கூடாரங்களை அமைத்ததை அடுத்து தமிழகத்தில் பிறந்த அச்சிந்தியா சிவலிங்கன் உட்பட 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பிரின்ஸ்டன் முன்னாள் மாணவர் வார இதழ் (PAW) தெரிவித்துள்ளது.

    இரண்டு பட்டதாரி மாணவர்கள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டனர் என்று பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் மோரில் கூறியுள்ளார்.

    அமெரிக்கா 

    அந்த மாணவி பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை

    வளாகத்தில் கூடாரங்கள் அமைப்பது பல்கலைக்கழக கொள்கையை மீறுவதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    எனினும், அவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் அவர்களது வகுப்பறைக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மற்றொரு பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் மைக்கேல் ஹாட்ச்கிஸ் கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த அச்சிந்தியா சிவலிங்கம் பிரின்ஸ்டனில் சர்வதேச வளர்ச்சி-பொது விவகாரங்களில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார்.

    அவருடன் கைது செய்யப்பட்ட சயீத் அங்கு முனைவர் பட்டம் பயின்று வருகிறார்.

    அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, மற்ற எதிர்ப்பாளர்கள் தானாகவே முன்வந்து தங்களுடைய முகாமை கலைத்தனர் என்று மைக்கேல் ஹாட்ச்கிஸ் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    அமெரிக்கா

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி உலகம்
    அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன்  ஜோ பைடன்
    'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை ரஷ்யா
    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா? இந்தியா

    தமிழ்நாடு

    ராமர் பூஜைக்கு தமிழகம் தடை விதித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு அயோத்தி
    இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது வாக்காளர்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி  தமிழக அரசு

    இந்தியா

    AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபேஷன் கடையான 'பஜார்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான் அமேசான்
    கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம் கனடா
    இன்று முழு சூரிய கிரகணம்: இந்தாண்டின் முதல் சூரிய கிரஹணத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி? சூரிய கிரகணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025