NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ
    நிகில் குப்தா என்ற இந்தியர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ

    எழுதியவர் Sindhuja SM
    Nov 30, 2023
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது.

    இதனால், இந்திய-கனட உறவுகள் சிதைந்துள்ளன. இதற்கிடையில், இன்னொரு காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அந்த சதி திட்டத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாகவும் அமெரிக்கா சந்தேகிக்கிறது.

    எனவே, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு எதிரான குற்றசாட்டுகளை தனித்தனியாக விசாரித்து வருகின்றன.

    டக்ஜ்வ்ஷ்னல்

    நிகில் குப்தா என்ற இந்தியர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு 

    அமெரிக்காவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைத்து வருகிறது. ஆனால், கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்க இந்தியா முன்பு மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசி இருக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாரின் கொலை வழக்கு விசாரணையிலும் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    "அமெரிக்காவில் இருந்து வெளிவரும் செய்திகள், நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறி வருவதை மேலும் உறுதிப்படுத்திஇருக்கிறது. அதாவது இந்தியா இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி, பயங்கரவாதி பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய முயற்சித்ததற்காக நிகில் குப்தா என்ற இந்தியர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    கனடா
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    அமெரிக்கா

    சல்மான் ருஷ்டி முதன்முதலில் அமைதியை சீர்குலைத்ததற்காக வாழ்நாள் சாதனை விருதை பெற்றார் பிரிட்டன்
    ஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன் ஜோ பைடன்
    துருவ நட்சத்திரத்திலிருந்து சூர்யா பின்வாங்கியது, விஜய் யோஹனை நிராகரித்த காரணம்..: GVM ஓபன் டாக் கௌதம் வாசுதேவ் மேனன்
    சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங் குடியரசு தலைவர்

    கனடா

    விசா ஸ்பான்சர்சிப் தருவதாக கனடாவில் சீக்கிய இளைஞர்களை ஈர்க்கும் காலிஸ்தானி ஆதரவாளர்கள் இந்தியா
    "நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்டின் ட்ரூடோ
    கனடா நாட்டு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தும் இந்திய ஹேக்கர்கள் குழு சைபர் கிரைம்

    இந்தியா

    ஆப்பிளின் இலக்கை எட்ட ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆப்பிள்
    CCI-யின் முடிவு மீதான கூகுளின் மேல்முறையீட்டு இறுதி விசாரணையை தள்ளிவைத்தது NCLAT கூகுள்
    நம்முடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி? அதனை ஏன் லாக் செய்ய வேண்டும்? ஆதார் புதுப்பிப்பு
    நடுங்கும் குளிர்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உத்தரகாண்ட்

    உலகம்

    நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள்  இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    உலகளவில் இந்தியாவில் தான் காசநோய் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு இந்தியா
    சைபர் தாக்குதலுக்கு உள்ளான உலகின் பெரிய வங்கியான சீனாவைச் சேர்ந்த ICBC சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025