NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்

    பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 10, 2024
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பொது தேர்தல் நடைபெற்றது.

    அந்த தேர்தலில் போட்டியிட இம்ரான் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவரது ஆதரவாளர்கள் சுயாட்சியாக நின்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றனர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    பாகிஸ்தான் 

    பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது நடந்த தாக்குதல் விவரங்கள் 

    இம்ரான் கான் மற்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ) கட்சி தலைவர்கள், மே 9-ம் தேதி பாகிஸ்தான் முழுவதும் உள்ள முக்கிய ராணுவ தளங்களை சேதப்படுத்திய வன்முறை தொடர்பாக பல வழக்குகளில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடந்த வருடம், இஸ்லாமாபாத்தில் துணை ராணுவ ரேஞ்சர்களால் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து பெரும் போராட்டம் வெடித்தது.

    ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட 20க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகள் மற்றும் அரசு கட்டிடங்கள் அப்போது நடந்த வன்முறையில் சேதமடைந்தன.

    லாகூர் கார்ப்ஸ் கமாண்டர் வீடு, அஸ்காரி டவர், ஷாட்மான் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    அந்த தாக்குதலில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ) கட்சி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்

    சமீபத்திய

    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு

    பாகிஸ்தான்

    ரஜோரி மோதல்- வெடிகுண்டு நிபுணர் உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொலை, 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் ஜம்மு காஷ்மீர்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு  தீ விபத்து
    பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் நாடுகளில் நிலநடுக்கம் நிலநடுக்கம்

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025