NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டை விதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டை விதிப்பு
    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டை விதிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 17, 2025
    01:33 pm

    செய்தி முன்னோட்டம்

    190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் நிறுவனர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை இஸ்லாமாபாத்தில் உள்ள பொறுப்புடைமை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.

    இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், புஷ்ரா பீபிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முறையே 1 மில்லியன் மற்றும் 0.5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாயும் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ஒரு சொத்து அதிபருடன் ஏற்பட்ட தீர்வின் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் நிறுவனம் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பிய 50 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளிலிருந்து இந்த வழக்கு எழுந்தது.

    பின்னடைவு

    இம்ரான் கானுக்கு பின்னடைவு

    இந்த தொகையை தேசிய கருவூலத்தில் டெபாசிட் செய்வதற்குப் பதிலாக, இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபி ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ உதவியதாகக் கூறப்படும் தொழிலதிபரின் தனிப்பட்ட நலனுக்காக நிதி திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    அல்-காதிர் அறக்கட்டளையின் அறங்காவலராக இருக்கும் புஷ்ரா பீபி, ஜீலத்தில் உள்ள அல்-காதிர் பல்கலைக்கழகத்திற்காக 458 கனல் நிலத்தை கையகப்படுத்தியது உட்பட, இந்த தீர்வின் மூலம் பயனடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

    தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புஷ்ரா பீபி காவலில் வைக்கப்பட்டார். அவரது நியமிக்கப்பட்ட சிறை அறை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, ஏற்கனவே சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு இது கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இம்ரான் கான்
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் நீதிமன்றம்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம் கனடா
    'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள்  சவுதி அரேபியா
    பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள் இந்தியா
    தேசிய பாதுகாப்பு காரணமாக X-ஐ தற்காலிகமாக தடை செய்த பாகிஸ்தான் எக்ஸ்

    பாகிஸ்தான் நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது பாகிஸ்தான்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    தோஷகானா வழக்கில் பாக்.,முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை இம்ரான் கான்
    'என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால்...': பாக் ராணுவ தளபதிக்கு இம்ரான் கான் எச்சரிக்கை!  இம்ரான் கான்

    உலகம்

    $4.3 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடன்களை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் ஜோ பிடென் அமெரிக்கா
    ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பகீர் சம்பவம்; இரண்டு பேர் பலி; 68 பேர் காயம் ஜெர்மனி
    குவைத்தில் இந்திய புலம்பெயர் சமூகத்தினரிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி நரேந்திர மோடி
    குவைத் எமிர் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025