NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மோதலுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகள் 'முக்கியமானது' என்கிறார் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோதலுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகள் 'முக்கியமானது' என்கிறார் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர்
    இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

    மோதலுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகள் 'முக்கியமானது' என்கிறார் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 25, 2023
    12:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா-கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள போதிலும் இந்தியாவுடனான உறவு "முக்கியமானது" என்று கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் கூறியுள்ளார்.

    "ஆழமான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் குடியேற்ற உறவுகளை இந்தியாவுடன் மேம்படுத்த கனடா தீவிரமாக முயல்கிறது. ஆனால், தனது நாட்டின் சட்டத்தையும் குடிமக்களையும் பாதுகாக்கும் பொறுப்பும் கனடாவுக்கு உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

    குளோபல் நியூஸில் தி வெஸ்ட் பிளாக் என்ற செய்தி நிறுவனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியின் போது அமைச்சர் பில் பிளேயர் இதை தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த திங்கள்கிழமை கனடா குற்றம் சாட்டியது.

    க்னவ்

    கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியதா என்பதை விசாரித்து வரும் கனடா 

    ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

    ஆனால், இந்தியா இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது.

    இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

    இந்நிலையில், இது குறித்து பேசி இருக்கும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர், "இந்தியாவுடனான கனடாவின் உறவைப் பொறுத்தமட்டில் இது ஒரு சவாலான பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில், தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியது தொடர்பாக எங்களுக்கு பெரிய கவலை உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    உலகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கனடா

    கனடா: இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்திய தேசிய கொடியை செருப்பால் அடித்து அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்  இந்தியா
    கனடா ஓபன் 2023 பட்டத்தை கைப்பற்றினார் இந்தியாவின் லக்ஷ்யா சென் பேட்மிண்டன் செய்திகள்
    சீக்கிய தீவிரவாதியை கொன்றதன் பின்னணியில் இந்தியா? மத்திய அமைச்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் அமித்ஷா

    உலகம்

    ஆறு வயதில் வீடியோ கேம் உருவாக்க முடியுமா? சாதித்து காட்டிய சிறுமி சிமர் குரானா கின்னஸ் சாதனை
    ஜி20 மாநாடு: புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார் பிரதமர் மோடி! ஜி20 மாநாடு
    செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு தற்கொலை
    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025