ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் கொடூர தீ விபத்து; 44 பேர் பலி, 300 பேர் மாயம்
செய்தி முன்னோட்டம்
ஹாங்காங்கில் உள்ள டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 300 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களில் நகரத்தின் மிக மோசமான தீ விபத்து இதுவாகும். மறுசீரமைப்புப் பணியில் இருந்த 32 மாடிக் கட்டிடத்தின் வெளிப்புறத்தை சுற்றியிருந்த மூங்கிலால் ஆன சாரத்தில் நண்பகலில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட பணிக்காக பயன்படுத்தப்பட்ட வலைகள் மற்றும் பலத்த காற்றின் காரணமாக, தீ விரைவாகப் பரவி, அப்பகுதியில் உள்ள எட்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழு குடியிருப்புகளை முழுவதுமாக அழித்தது. தீப்பிழம்புகள் கட்டிடத்தின் உச்சியில் இருந்து பரவி, அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் வேகமாக பாய்ந்தன.
கைது
மீட்பு மற்றும் கைது நடவடிக்கை
இந்த விபத்திற்கு பின்னர் அந்த பகுதியிலிருந்த சுமார் 900க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள், குறிப்பாக முதியவர்கள், உடனடியாக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தீயை அணைக்கும் பணிக்கு 140க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டிடங்களுக்குள் வெப்பநிலை மிக அதிகமாக இருந்ததாலும், இடிபாடுகள் மற்றும் எரிந்த சாரங்கள் கீழே விழுந்ததாலும் மீட்புப் பணியாளர்கள் சிரமப்பட்டனர். இந்த பயங்கரமான தீ விபத்து தொடர்பாக கொலைக்குற்றம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது. ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ, தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும், காணாமல் போனவர்களை தேடும் பணியை விரைவுபடுத்தவும் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
This fire in Hong Kong’s Tai Po district killed at least 13 people (including a fire man). It’s raging out of control through 7 of 8 towers of this public housing development that’s home to more than 4,000 people#HongKong pic.twitter.com/vZvljZrclM
— Ivan Watson (@IvanCNN) November 26, 2025