NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நேபாளத்தில் 5 வெளிநாட்டு பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேபாளத்தில் 5 வெளிநாட்டு பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்
    நேபாளத்தில் 5 வெளிநாட்டு பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

    நேபாளத்தில் 5 வெளிநாட்டு பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 11, 2023
    12:50 pm

    செய்தி முன்னோட்டம்

    நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி, இன்று காலை 10.12 மணிக்கு, ஹெலிகாப்டர் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது.

    முதற்கட்ட தகவல்களின்படி, விமானியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பயணித்த இந்த ஹெலிகாப்டரை, மூத்த கேப்டன் சேட் குருங் என்பவர் இயக்கியுள்ளார். ஹெலிகாப்டரில் பயணித்த ஐந்து பயணிகளும் வெளிநாட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

    இந்த ஹெலிகாப்டர், சொலுகும்புவில் உள்ள சுர்கியில் இருந்து, தலைநகர் காத்மாண்டுக்கு காலை 9:45 மணிக்கு புறப்பட்டதாக, நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தகவல் அதிகாரி ஞானேந்திர பூல் தெரிவித்துள்ளார்.

    route changed due to monsoon rain

    மோசமான வானிலையால் ஹெலிகாப்டரில் பாதை மாற்றம்

    நேபாளத்தில் பருவமழை காரணமாக, இந்த ஹெலிகாப்டரில் வழித்தடம் மாற்றப்பட்டு வேறு பாதையில் இயக்கப்பட்டுள்ள தகவலை, விமான நிலைய அதிகாரி சாகர் கேடல் தெரிவித்தார்.

    காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கிடையே, "ஹெலிகாப்டரில் உள்ள மொத்த நபர்கள், 6 (5 பயணிகள் + 1 கேப்டன்). ஆல்டிட்யூட் ஏர் ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து தேடுதல் மற்றும் மீட்புக்காக புறப்பட்டது" என்று நேபாள விமான போக்குவரத்து ஆணையம் ட்வீட் செய்துள்ளது.

    நேபாளத்தில் அடிக்கடி ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துகள் நடப்பது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

    கடைசியாக கடந்த ஜனவரியில் நடந்த ஒரு விமான விபத்தில், 72 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நேபாளம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா உலகம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025