NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல்
    பிரிகோஜின் ரசிக அதிபர் புதினுக்கு உணவு பரிமாறும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

    வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல்

    எழுதியவர் Srinath r
    Oct 06, 2023
    01:20 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆகஸ்ட் மாதம் விமான விபத்தில் கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படைத் தலைவர் பிரிகோஜின் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள் இருந்ததாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    வாக்னர் கூலிப்படையின் தலைவரும், ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பருமான பிரிகோஜின், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடந்த விமான விபத்தில் மரணமடைந்தார்.

    இவர் மரணம் அடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ரஷ்ய அதிபருக்கு எதிராக மாஸ்கோ நகர் நோக்கி கிளர்ச்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரின் இறப்பு குறித்து பல மேற்கத்திய நாடுகள் சந்தேகங்களை எழுப்பியிருந்தன.

    ரஷ்ய அதிபரின் தற்போதைய பேச்சு பிரிகோஜின் மரணத்தில் ரஷ்ய விசாரணை குறித்து வெளிவரும் முதல் தகவலாகும்.

    2nd card

    பிரிகோஜின் உடலில் ரத்தப் பரிசோதனை செய்யப்படவில்லை

    ரஷ்யாவில் நடந்து வரும் வால்டாய் கலந்துரையாடல் மன்ற நிகழ்வில் பேசிய புதின்.

    "விசாரணை குழுவின் தலைவர் என்னிடம் சில நாட்களுக்கு முன் அறிக்கை அளித்தார்."

    "விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களில் கையெறி குண்டுகளின் பாகங்கள் கிடைத்தன. விமானம் வெளிப்புறத்தில் இருந்து பாதிப்புக்குள்ளாகவில்லை" எனக் கூறியிருந்தார்.

    இறந்தவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்படாதது குறித்த தனது அதிருப்தியை அதிபர் புதின் வெளிப்படுத்தினார்.

    "இறந்தவர்களுக்கு மது மற்றும் போதைப் பொருட்களை கண்டறிவதற்கான ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை".

    "செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் உள்ள வாக்னர் நிறுவனத்தில் 10 பில்லியன் ரஷ்ய ரூபல் மற்றும் 5 கிலோ கொக்கின் பறிமுதல் செய்யப்பட்டது" என புதின் நினைவு கூர்ந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    விளாடிமிர் புடின்
    விமானம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரஷ்யா

    சோவியத் கால அணை தகர்க்கப்பட்டது: உக்ரைனில் பெரும் வெள்ளம் உலகம்
    உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு  உலகம்
    ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்  இந்தியா
    உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன  சீனா

    விளாடிமிர் புடின்

    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு  ரஷ்யா
    புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு  உலகம்
    இரண்டு நாட்களில் ரஷ்யாவை அதிர வைத்த இராணுவ கிளர்ச்சி ரஷ்யா
    வாக்னர் கிளர்ச்சியின் எதிரொலி: புதிய மசோதாவை முன்மொழிய இருக்கிறது ரஷ்யா ரஷ்யா

    விமானம்

    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025