NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உலகளவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு, எச்சரிக்கும் புதிய தகவலறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகளவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு, எச்சரிக்கும் புதிய தகவலறிக்கை
    உளகளவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு

    உலகளவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு, எச்சரிக்கும் புதிய தகவலறிக்கை

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 17, 2023
    10:58 am

    செய்தி முன்னோட்டம்

    Aqueduct Water Risk Atlas என்ற தங்களுடைய திட்டத்தின் கீழ், உலகில் அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை குறித்த தகவலறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது World Resource Institute (WRI) அமைப்பு.

    உலகில் 25 நாடுகளில் வாழும், கிட்டத்தட்ட பூமியின் 25% மக்கள் தொகையானது, தண்ணீர் எச்சரிக்கையை எதிர்கொண்டு வருவாதாக தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது அந்த அமைப்பு.

    உலகில் 4 பில்லியன் மக்கள் (ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பாதி), ஒரு வருடத்தில் குறைந்தது ஒரு மாதமாவது தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2050-ம் ஆண்டு இந்த அளவு 60% ஆக உயரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர்

    GDP-யை பாதிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: 

    2050-ல் 71 ட்ரில்லியன் டாலர்கள் (31%) அளவு உளகளாவிய ஜிடிபி பாதிப்பை, தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுத்தும் என WRI அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2010-ல் 15 ட்ரில்லியன் டாலர்களாக (24%)இருந்தது குறிப்பிடத்தக்கது.

    2050-ல், இந்தியா, மெக்ஸிகோ, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளே தண்ணீர் தட்டுப்பாட்டினால், அதிகளவிலான ஜிடிபி பாதிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது, பஹ்ரைன், சைப்ரஸ், குவைத். லெபனான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள், அதிகளவிலான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் நாடுகளாக இருப்பதாகவும் WRI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    "பூமியின் மிகவும் முக்கியமான வளம் தண்ணீர். ஆனால், அவற்றை நாம் சரியாகக் கையாளக் கற்றுக் கொள்ளவில்லை", எனத் தெரிவித்திருக்கிறார், இந்தத் தகவலறிக்கையின் ஆசிரியர் சமந்தா குஸ்மா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    பூமி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உலகம்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய-அமெரிக்கர்: யாரிந்த ஹிர்ஷ் வர்தன் சிங்? அமெரிக்கா
    பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி பாகிஸ்தான்
    தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை  பாகிஸ்தான்
    திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள் ஆன்மீகம்

    பூமி

    ஏன் பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும்? ஸ்மார்ட்போன்
    விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா நாசா
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? சந்திரன்
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025