NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020இல் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020இல் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக தகவல் 

    நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020இல் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 18, 2024
    04:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலியாவின் ரகசிய பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்துகொள்ள முயற்சித்த நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(ஏபிசி) சமீபத்திய விசாரணை தெரிவித்துள்ளது.

    அந்த நான்கு அதிகாரிகளும் அமைதியாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால் இந்த பிரச்சனை இரு நாட்டு பிரச்சனையாக உருவாகவில்லை என்று ஆஸ்திரேலிய தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த அதிகாரிகளின் வெளியேற்றத்தை அடுத்து, இந்தியாவை பிற நாடுகள் "ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இணையாக வைத்துள்ளது." என்று ஏபிசி கருத்து தெரிவித்துள்ளது.

    ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வெளிநாடுகளின் நெறிமுறைகளை மீறுவதில் பெயர் பெற்ற நாடுகளாகும்.

    ஆஸ்திரேலியா 

    அவர்கள் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தை கண்காணித்ததாக குற்றச்சாட்டு 

    "அந்த நான்கு அதிகாரிகளும் முன்னாள் மற்றும் தற்போதைய அரசியல்வாதிகள், மாநில போலீஸ் சேவை ஆகியவற்றை குறிவைத்து செயல்பட்டு வந்தனர். முக்கியமாக, அவர்கள் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தை கண்காணித்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்" என்று ஏபிசி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    2021 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு சம்பவத்தை குறித்து பேசிய ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின்(ஏஎஸ்ஐஓ) தலைவரான மைக் புர்கெஸ், வெற்றிகரமாக ஒரு உளவாளி கூட்டத்தை ஒழித்துவிட்டோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "ஆஸ்திரேலியாவில் இயங்கி வந்த ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு உளவுத்துறையைச் சேர்ந்த உளவாளிகளின் கூட்டை கலைத்தோம். நாங்கள் அந்த வெளிநாட்டு உளவாளிகளை எதிர்கொண்டு, அமைதியாகவும் தொழில் ரீதியாகவும் ஆஸ்திரேலியாவில் இருந்து அவர்களை அகற்றினோம்," என்று ASIO தலைவர் கூறி இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆஸ்திரேலியா
    உளவுத்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா

    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: நடிகர் சுரேஷ் கோபி விளக்கம்  பாஜக
    பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித் மாளவியாவை பதவி நீக்க வேண்டும் என்று கோரியது காங்கிரஸ்  மேற்கு வங்காளம்
    பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்? பிரதமர் மோடி
    PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு  பிரதமர் மோடி

    ஆஸ்திரேலியா

    Sports Round UP: வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் உலக கோப்பை
    AUS vs NED: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா ஒருநாள் உலகக்கோப்பை
    AUS vs NED: நெதர்லாந்து அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up: இமாலய வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை

    உளவுத்துறை

    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை கேரளா
    விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்? உக்ரைன்
    தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல் தாவூத் இப்ராஹிம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025