Loading...
220 மில்லியன் வாக்காளர் விபரங்களை சீனா திருடியதா? அமெரிக்காவில் பெரும் பூகம்பத்தை கிளப்பிய டொனால்ட் டிரம்ப் உரை
சீனா மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் டொனால்ட் டிரம்ப்

220 மில்லியன் வாக்காளர் விபரங்களை சீனா திருடியதா? அமெரிக்காவில் பெரும் பூகம்பத்தை கிளப்பிய டொனால்ட் டிரம்ப் உரை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2026
07:38 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் சுழற்சியின் போது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் தேர்தல் தரவுகள் திருடப்பட்டதாக சீனா மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாட்டிற்கு ஆற்றிய உரையில், இந்தத் தரவு திருட்டின் மூலம் சுமார் 220 மில்லியன் அமெரிக்க வாக்காளர்களின் கோப்புகளை சீனா சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளது என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் 18 மாநிலங்களை சேர்ந்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் தரவுகள் சீனாவால் வாங்கப்பட்டோ, திருடப்பட்டோ அல்லது ஹேக் செய்யப்பட்டோ இருக்கலாம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தேர்தல் உள்கட்டமைப்பில் உள்ள அதிர்ச்சியூட்டும் பலவீனங்களை வெளிப்படுத்தும் முக்கிய உளவுத்துறை தகவல்களை உடனடியாக பகிரங்கப்படுத்தப் போவதாகவும் அவர் தனது உரையின் போது அறிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சீனா

டிரம்பிற்கு எதிராக சீனாவின் உத்தி

2018 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்தே அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தச் சீனா வேலை செய்யத் தொடங்கியதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

பின்னர் 2019 இல், அமெரிக்காவில் தமக்கு உள்ள உள்நாட்டு நம்பிக்கையைக் குலைப்பதையே சீன அரசு முதன்மை உத்தியாக கொண்டிருந்ததாகவும், இதற்காகப் பெரிய அமெரிக்க நிறுவனங்களுடன் உள்ள தொடர்புகளை பயன்படுத்தி வணிகத் தலைவர்களைத் தமக்கு எதிராகத் திருப்பச் சீனா முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமக்கு எதிராக எதிர்மறையான கட்டுரைகளை எழுத அமெரிக்க ஊடகவியலாளர்களுக்குச் சீனா பெருந்தொகைப் பணம் வழங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விசாரணை

உளவுத்துறையின் ரகசியம் மற்றும் விசாரணைக்கு உத்தரவு

கச்சா எண்ணெய் மீதான வரிகளை தாம் விதித்ததால், 2020 தேர்தலில் தாம் தோற்க வேண்டும் என்று சீனா கடுமையாக போராடியதாக டிரம்ப் கூறினார்.

இந்தத் தரவு திருட்டு குறித்து 2020-லேயே அமெரிக்க உளவு அமைப்புகள் அறிந்திருந்தும், அதற்கு பொறுப்பானவர்கள் இந்தத் தகவலை தமக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தெரிவிக்காமல் ரகசியமாக மறைத்துவிட்டனர் என்று அவர் சாடினார்.

எனவே, இந்த தகவல் எவ்வாறு மறைக்கப்பட்டது என்பது குறித்து தேசிய உளவுத்துறை இயக்குநரகம், நீதித்துறை, FBI மற்றும் CIA ஆகிய அமைப்புகள் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும், 2021ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கை, 2020 அதிபர் தேர்தலின் வாக்காளர் பதிவு, எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் மாற்றியமைக்கவில்லை என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT