NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீனாவில் கனமழை: 20 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீனாவில் கனமழை: 20 பேர் பலி 
    தொடர் மழையினால் அணைகள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் அபாயகரமான நிலைக்கு உயர்ந்தது.

    140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீனாவில் கனமழை: 20 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 02, 2023
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவின் தலைநகரில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், கடும் இயற்கை சீற்றத்தை சீனா எதிர்கொண்டிருக்கிறது.

    குறைந்தது 140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெய்ஜிங்கில் மழை பெய்து வருகிறது.

    கடந்த சனிக்கிழமை முதல் இன்று காலை வரை பெய்ஜிங்கில் 744.8 மில்லிமீட்டர் மழை (29.3 அங்குலம்) பதிவாகியுள்ளது.

    இந்த கனமழையால், பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹெபே மாகாணம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

    தொடர் மழையினால் அணைகள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் அபாயகரமான நிலைக்கு உயர்ந்தது.

    இதனையடுத்து, பெய்ஜிங் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    சஜ்ஜிலேவ்க்

     20 பேர் உயிரிழந்துள்ளனர், 27க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்

    கனமழை காரணமாக சீனாவின் பல நகரங்களில் சாலைகள், மின் வசதி மற்றும் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    பெய்ஜிங்கை சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கார்கள் மற்றும் சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    இதனால், மேற்கு சீனாவில் உள்ள சுவோசோ நகரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு, அந்த நகரத்தின் காவல்துறையினர், மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக விளக்குகள் தேவை என்று சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

    பெய்ஜிங்கில் பெய்த மழையால் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர், 27க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

    இந்த பேரழிவால் 850,000க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சீனா

    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  இந்தியா
    இந்திய பெருங்கக்கடலில் மூழ்கிய சீனப் படகு: 39 பேரைக் காணவில்லை  உலகம்
    சீனா: 'போலி செய்திகளை' பரப்பியதற்காக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கணக்குகள் முடக்கம் உலகம்
    மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறதா 'BGMI' மொபைல் கேம்? கேம்ஸ்

    உலகம்

    வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம் பிரதமர் மோடி
    பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி உலக செய்திகள்
    அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை  அமெரிக்கா
    அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது ரஷ்யா ரஷ்யா

    உலக செய்திகள்

    பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம்  பிரான்ஸ்
    போர் விமான இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவுடன் இணைந்தது பிரான்ஸ்  பிரான்ஸ்
    ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு ஆப்கானிஸ்தான்
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல் ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025