NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை!
    அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் 10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்கிறது இந்த ஆய்வு! (படம்: The Economist)

    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 17, 2022
    05:17 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகமெல்லாம் கொரோனா ஆடி அடங்கிவிட்டது. ஆனால், சீனாவில் இப்போது தான் இதற்கு முன்பு இருந்ததை விட அதிகமாக கொரோனா பரவி கொண்டிருக்கிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக சீனாவில் கடும் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன், இதைக் கண்டித்து சீனர்கள் பலர் பெரும் போராட்டங்களை நடத்தினர்.

    இதையடுத்து, சீன அரசு ஊரடங்கைத் தளர்த்தியது.

    இதனால், கொரோனா இன்னும் வேகமாகப் பரவும் நிலை அங்கு நிலவிவருகிறது.

    கொரோனவால் ஒரு நாளில் 30-40 பேர் மட்டுமே சீனாவில் உயிரிழந்து கொண்டிருந்தனர். ஆனால், அது இப்போது 300ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையில், IHME என்ற அமெரிக்க சுகாதார ஆய்வு நிறுவனம் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இந்த அறிக்கையின்படி, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்.

    எச்சரிக்கை

    ஆய்வறிக்கையில் கூறப்படும் தகவல்கள்:

    சீனாவில் கொரோனா எண்ணிக்கை அப்படியே உயர்ந்து அடுத்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி உச்சத்தைத் தொடும்.

    அந்த சமயத்தில் சீன மக்களில் மூன்றில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர்.

    இதேபோல், ஹாங்காங்கை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனமும் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இந்த ஆய்வின் படி, சீன அரசு சீக்கிரமே நாடு முழுவதும் தடுப்பூசியை அமல் படுத்தவில்லை என்றால், 9,64,400 உயிரிழப்புகள் அதாவது கிட்டத்தட்ட 10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக சீனாவில் உயிரிழப்புகள் கைமீறி போய் கொண்டிருப்பதால், மயானங்களில் நிறைய கூட்டம் அலை மோதுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    ஆனால், இதுவரை சீன அரசு அதிகாரபூர்வமாக எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிக்கிறது என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    கோவிட்
    வைரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்

    கோவிட்

    கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன? உலகம்
    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை

    வைரஸ்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை தூக்கம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025