NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அருணாச்சலில் உள்ள பகுதிகளின் பெயரை சீனாவால் மாற்ற முடியாது:  பழமையான மடாலயம் அதிருப்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அருணாச்சலில் உள்ள பகுதிகளின் பெயரை சீனாவால் மாற்ற முடியாது:  பழமையான மடாலயம் அதிருப்தி
    தவாங் மடாலயம் 1680இல் லோட்ரே கியாட்சோவால் நிறுவப்பட்டது

    அருணாச்சலில் உள்ள பகுதிகளின் பெயரை சீனாவால் மாற்ற முடியாது:  பழமையான மடாலயம் அதிருப்தி

    எழுதியவர் Sindhuja SM
    May 04, 2023
    04:59 pm

    செய்தி முன்னோட்டம்

    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பெயரை சீனா மாற்றியதற்கு தவாங் மடாலயம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

    "இங்குள்ள இடங்களை மறுபெயரிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று அந்த மடாலயத்தில் உள்ள துறவிகள் நியூஸ் 18 செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

    காடன் நம்கியால் லாட்சே என்றும் அழைக்கப்படும் தவாங் மடாலயம் ஆசியாவின் மிகப் பழமையான மடாலயமாகும்.

    இந்த மடாலயத்தில் 300 புத்த துறவிகள் மற்றும் 17 கோம்பாக்கள் வசித்து வருகின்றனர்.

    நியூஸ் 18இடம் பேசிய மடத்தின் லாமா துப்டன் சாஸ்திரி, "நாங்கள் ஏற்கனவே இதற்கு எதிராக பேரணிகளை நடத்தியுள்ளோம். சீனா எங்களை தொந்தரவு செய்ய முயற்சிக்கிறது. ஆனால் இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்." என்று கூறியுள்ளார்.

    DETAILS

    தவாங் மடாலயம் மகாயான பௌத்தத்திற்கு மிகவும் புனிதமான இடமாகும்

    "திபெத்தில், சீனா பௌத்தர்களை சித்திரவதை செய்தது மற்றும் மதம், திபெத்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றை அழிக்க முயன்றது; அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளானது. அவர்கள் நிறுவ முயற்சிக்கும் போலி கதைகளை கடுமையாக கண்டிக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

    தவாங் மடாலயம் மகாயான பௌத்தத்திற்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.

    ஐந்தாவது தலாய் லாமாவின் விருப்பத்தின் பேரில் 1680 ஆம் ஆண்டில் லோட்ரே கியாட்சோவால் இந்த மடாலயம் நிறுவப்பட்டது.

    65க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள், 400+ கையால் எழுதப்பட்ட நூல் களஞ்சியசாலையுடன் கூடிய மூன்று மாடிக் கட்டமைப்பாக இந்த மடாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    அருணாச்சல பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை
    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19
    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை

    சீனா

    சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா கொரோனா
    ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது வெளியுறவுத்துறை
    பெண்களின் கதைகளை டாட்டூவாக வரையும் சீன கலைஞர் உலகம்
    பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா இந்தியா

    அருணாச்சல பிரதேசம்

    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு அஞ்சலி
    அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா சீனா
    அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு சீனா

    இந்தியா

    இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு பல முழுநேர விமான சேவை நிறுவனங்கள் தேவை!  விமான சேவைகள்
    இந்தியாவில் ஒரே நாளில் 3,325 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு  கொரோனா
    அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது  அமெரிக்கா
    காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம்  உக்ரைன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025