NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா 
    இந்தியாவின் மீது பெரும் குற்றச்சாட்டை வைத்திருக்கும் கனடா

    காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 19, 2023
    10:04 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.

    இதனையடுத்து, ஒட்டாவாவில் உள்ள புது டெல்லியின் உளவுத்துறைத் தலைவரை கனடா வெளியேற்றியது.

    இந்த நடவடிக்கையால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவு மேலும் மோசமாகியுள்ளது.

    ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாக கனட நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் .

    ட்ன்வ்ஜ்க

     குற்றச்சாட்டை தெளிவுபடுத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது கனடா 

    மேலும், இந்த விஷயத்தை தெளிவுபடுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு இந்திய அரசாங்கத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்ததும் ட்ரூடோ அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

    "இன்று நாங்கள் கனடாவில் இருந்து மூத்த இந்திய தூதர் ஒருவரை வெளியேற்றியுள்ளோம்," என்று அந்த அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் மெலனி ஜோலி பேசி இருக்கிறார்.

    வெளியேற்றப்பட்ட இந்தியர், கனடாவில் உள்ள இந்தியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின்(RAW) தலைவர் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிஜ்க்க்வ்

    கனடாவின் குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்தது இந்தியா 

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு குறித்த கனேடிய அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

    கனடாவின் குற்றச்சாட்டுகள் "அபத்தமானது மற்றும் உள்நோக்கம்" உள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    "கனேடியப் பிரதமரின் அறிக்கையையும், அவர்களின் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் நிராகரிக்கிறோம். கனடாவில் வன்முறைச் செயலில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் அபத்தமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம்(MEA) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    மத்திய அரசு, "கனேடிய பிரதமர் நம் பிரதமரிடம் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன." என்று தெரிவித்துள்ளது.

    மேலும், "சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு அரசியலை நாங்கள் நடத்துகிறோம்" என்றும் இந்தியா கூறியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை 

    India rejects allegations by Canada:https://t.co/KDzCczWNN2 pic.twitter.com/VSDxbefWLw

    — Arindam Bagchi (@MEAIndia) September 19, 2023

    விஜேசிபி

    ஹர்தீப் சிங் நிஜ்ஜாரும் காலிஸ்தான் பயங்கரவாதமும் 

    இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் , வான்கூவரின் புறநகர்ப் பகுதியான சர்ரேயில் ஜூன்-18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியதாக நிஜ்ஜார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    அவர் கொல்லப்பட்டதில் இருந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து இந்திய அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

    இந்தியாவில் இருந்து சீக்கியர்களுக்கென ஒரு தனி நாட்டை பிரிக்க வேண்டும் என்று கூறி இந்தியாவுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக செயல்படுபவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கனடா

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம் உலக செய்திகள்
    10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா உலகம்
    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம் இந்தியா
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் உலக செய்திகள்

    இந்தியா

    அலுவலகங்களை சுத்தம் செய்ததன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்டிய மத்திய அரசு மத்திய அரசு
    விண்வெளியைத் தொடர்ந்து ஆழ்கடலை ஆய்வு செய்ய சமுத்திரயான் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா தொழில்நுட்பம்
    தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா: அரசியல் சாசன அமர்வை கூட்டுகிறது உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    இந்தியாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    உலகம்

    ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது  பாகிஸ்தான்
    உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் இந்தியா
    100 கிராம் பம்ப்கின் விதைகள் - மறைந்திருக்கும் நன்மைகள்  இந்தியா
    இந்தியாவைத் தொடர்ந்து சீனாவின் புதிய வரைபடத்திற்கு தென்கிழக்காசிய நாடுகளும் எதிர்ப்பு இந்தியா

    உலக செய்திகள்

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட்  அமெரிக்கா
    மாலி நாட்டில் பயங்கரவாத துப்பாக்கி சூடு: 21 பொதுமக்கள் பலி ஆப்பிரிக்கா
    பாகிஸ்தான்: டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதியதால் 16 பேர் பலி பாகிஸ்தான்
    மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி  பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025