NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டப் புத்தகம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டப் புத்தகம்! 
    100 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டப் புத்தகம்!

    கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டப் புத்தகம்! 

    எழுதியவர் Arul Jothe
    May 26, 2023
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில், வரலாற்றாசிரியர் பென்சன் லாசிங் எழுதிய ''A Family History of the United States'' என்ற புத்தகம், 96 ஆண்டுகளுக்குப் பிறகு, செயின்ட் ஹெலினா பொது நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இது 1927இல், படிப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட புத்தகம்.

    இன்ஸ்டாகிராம் போஸ்ட் படி, ஜிம் பெர்ரி என்பவர், தனது வீட்டை சுத்தம் செய்யும் போது, அவருக்கு கிடைத்த இந்த பழைய புத்தகத்தை, நூலகத்தில் திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    "எனது மூதாதையர், நூலகத்திலிருந்து கடன் வாங்கிய புத்தகம் இது. ஐந்து தலைமுறைகளாக எங்களிடம் இருந்த ஒரு பழைய புத்தகம்!" என்று பெர்ரி கூறியுள்ளார்.

    நூலக இயக்குனர் கிறிஸ் க்ரீடன், "நான் பார்த்தவற்றிலேயே, இது மிகவும் பழமையான புத்தகம்" என்று தெரிவித்துள்ளார்.

    Library Book

    செயின்ட் ஹெலினா பொது நூலகம்

    இந்த லைப்ரரி புத்தகம், 1927-இல், பெர்ரியின் மனைவியின் தாத்தா, ஜான் மெக்கார்மிக் அவர்களால், நூலகத்திலிருந்து எடுத்துவரப்பட்டது என்றும், தனது இரண்டு மகள்களுக்கு அமெரிக்க வரலாற்றைப் பற்றி கற்பிக்க இந்த புத்தகத்தை எடுத்திருக்கலாம் என்றும், பெர்ரி கூறினார்.

    நூலக ஊழியர்கள் புத்தகத்தைத் திறந்து பார்த்தபோது மிகவும் சேதமாகி இருந்ததாகவும், பக்கங்கள் அனைத்தும் கிழிந்து போகக்கூடிய நிலைமையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில், புத்தகம் திரும்பப் கொடுக்கப்பட வேண்டிய தேதியின் முத்திரை, மங்கலாக இருந்தது. அதை கொண்டு தான், இந்த புத்தகம் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்டது என கண்டுபிடித்ததாக பெர்ரி கூறுகிறார். அதில் பிப்ரவரி 21, 1927 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    செயின்ட் ஹெலினா பொது நூலகம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளது.

    Instagram அஞ்சல்

    Instagram Post

    Instagram post

    A post shared by sthelenapubliclibrary on May 26, 2023 at 12:48 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்

    அமெரிக்கா

    வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் முதல் சோதனை ராக்கெட்!  எலான் மஸ்க்
    111 வருட பழமையான டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு வைரலாகிறது வைரல் செய்தி
    320 கோடியில் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட சொகுசு வீடு - சிறப்புகள் என்ன?  உலக செய்திகள்
    யூடியூப் பரிந்துரைகள் குறித்த வழக்கு.. AI சேவையையும் பாதிக்குமா?  சமூக வலைத்தளம்

    வைரல் செய்தி

    ஜெருசலேம் தேவாலயத்தில் உள்ள 'அசையா ஏணி'யின் மர்மம் விலகியது வைரலான ட்வீட்
    உணவகத்தில், உங்கள் ஃபேவரைட் உணவிற்கு, உங்கள் பெயரை சூட்டினால் எப்படி இருக்கும்! ட்ரெண்டிங் வீடியோ
    இங்கிலாந்து அரசர் முடிசூட்டு விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் மும்பை டப்பாவாலாக்கள் மும்பை
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  தென்காசி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025