NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது 
    303 இந்தியர்களுடன் நிகரகுவாவிற்கு புறப்பட்ட விமானத்தை விசாரணைக்காக பிரான்ஸ் நேற்று தடுத்து நிறுத்தியது.

    300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 23, 2023
    09:44 am

    செய்தி முன்னோட்டம்

    300க்கும் மேற்பட்ட இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி புறப்பட்ட விமானத்தை "மனித கடத்தல்" என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திய பிரான்ஸ் காவல்துறையினர், இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

    இந்திய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.

    303 இந்தியர்களுடன் நிகரகுவாவிற்கு புறப்பட்ட விமானத்தை விசாரணைக்காக பிரான்ஸ் நேற்று தடுத்து நிறுத்தியது.

    ரோமானிய நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ340 விமானம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து புறப்பட்டு கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் ஒரு தொழில்நுட்ப நிறுத்தத்திற்காக நேற்று தரையிறங்கியது.

    அப்போது விமானத்தில் இருந்த சில பயணிகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    ஜடல்வ்

    இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

    மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் நிபுணத்துவம் பெற்ற பிரிவினர், அந்த விமானத்தில் இருந்த இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறுவனம் பூர்த்தி செய்யும் என்றும் லெஜண்ட் ஏர்லைன்ஸின் வழக்கறிஞர் லிலியானா பகாயோகோ தெரிவித்துள்ளார்.

    இந்திய பயணிகளுக்கு ஆதரவளிக்க இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    303 இந்தியர்கள் பிரான்ஸ் விமான நிலையத்தில் நேற்று இரவைக் கழித்தனர். அவர்கள் எப்போது மீண்டும் பறக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    "நாங்கள் நிலைமையை ஆராய்ந்து வருகிறோம். பயணிகளின் நல்வாழ்வையும் உறுதிசெய்து கொண்டிருக்கிறோம்" என்று பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரான்ஸ்
    இந்தியா
    உலகம்
    விமானம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிரான்ஸ்

    சுற்றுலா: பிரான்சிற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் சுற்றுலா
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி உலகம்

    இந்தியா

    இந்தியா: ஒரே நாளில் மேலும் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல் மத்திய அரசு
    இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்கூட்டர் விற்பனை  ஸ்கூட்டர்

    உலகம்

    காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய முயற்சி: இந்திய அரசை சந்தேகிக்கும் அமெரிக்கா அமெரிக்கா
    தொடரும் ரசிகர்கள் காத்திருப்பு: துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று வெளியாகாது என ஜிவிஎம் தகவல் கௌதம் வாசுதேவ் மேனன்
    'இந்து விழுமியங்களால் உலகில் அமைதி ஏற்படும்': தாய்லாந்து பிரதமர்! தாய்லாந்து
    அயர்லாந்து மக்களை அயர்லாந்து பிரதமர் வெறுப்பதாக எக்ஸில் கருத்து பதிவிட்ட எலான் மஸ்க் அயர்லாந்து

    விமானம்

    பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர் விமான சேவைகள்
    இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்  இந்தியா
    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025