NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது
    விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் pc: ராய்ட்டர்ஸ்

    பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 26, 2023
    09:46 am

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், 13 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, 39 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்ததாக இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அறிவித்தனர்.

    விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனிய கைதிகள் அனைவரும் பெண்கள் மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்.

    அதே போல ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தான்.

    இந்த ஒப்பந்தம் நான்கு நாட்கள் நீடிக்கும். ஒப்பந்தத்தின் படி, 50 இஸ்ரேலியர்கள் மற்றும் 150 பாலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டும்.

    எனினும், 39 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்ட அதே நாளில், 17 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனிய கைதிகள் கிளப் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.

    card 2

    17 பணயக்கைதிகள் கொண்ட 2வது குழுவை ஹமாஸ் விடுவித்தது

    கடந்த வெள்ளிக்கிழமை, ஒப்பந்தத்தில் உள்ளபடி 13 இஸ்ரேல் பணயக் கைதிகளை, செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்த நிலையில், நேற்று விடுவிக்கப்பட இருந்த கைதிகளை, நிவாரண பொருட்கள் கசாவிற்குள் அனுமதிக்கப்பட்ட பின்னரே விடுவிப்போம் என ஹமாஸ் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

    சிறிது கால தாமதத்திற்கு பிறகு, நேற்று 17 பணயக்கைதிகள் கொண்ட 2வது குழுவை ஹமாஸ் விடுவித்தது.

    ஹமாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பதின்மூன்று இஸ்ரேலியர்கள் மற்றும் நான்கு தாய்லாந்து பிரஜைகள் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கு வந்தடைத்தனர்.

    விடுவிக்கப்பட்ட 13 இஸ்ரேலியர்களில், ஆறு பேர் பெண்கள் மற்றும் ஏழு பேர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலஸ்தீனம்
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சிறை

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    பாலஸ்தீனம்

    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்
    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் அமெரிக்கா
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான்  பாகிஸ்தான்

    இஸ்ரேல்

    சட்டம் பேசுவோம்: போரை கட்டுப்படுத்தும் சர்வதேச சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    தாக்குதலை தீவிரப்படுத்தி காசா பகுதியை இரண்டாக பிரித்த இஸ்ரேல்   இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    நவம்பர் 30 வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து  இந்தியா
    பாலஸ்தீன 'ஹமாஸ்' அமைப்பை இந்தியா ஏன் தடை செய்யவில்லை? ஹமாஸ்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    திடீரென்று பாலஸ்தீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்  பாலஸ்தீனம்
    இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள்  ஈரான்
    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்
    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி காசா

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025