NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை
    40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை

    எழுதியவர் Sindhuja SM
    Jul 23, 2023
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

    40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்,சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷஃபியுல்லா ரஹிமி தெரிவித்துள்ளார்.

    மைதான் வார்டக் மாகாணத்தின் ஜல்ரேஸ் மாவட்டத்தில் உள்ள முக்கிய பேரிடர் மண்டலத்திற்கு அவசர உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

    ஹசிஜா

    நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அழிந்தது 

    காபூலுக்கு மேற்கே உள்ள இந்த ஜல்ரேஸ் மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுமார் 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஜபிஹுல்லா முஜாஹிட் கூறியுள்ளார்.

    நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும், காணாமல் போனவர்கள் இடிந்து விழுந்த வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்க வேண்டும் என்றும் மாகாண ஆளுநர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

    மேலும், நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அழிந்துள்ளதாகவும், தலைநகர் காபூலுக்கும் மத்திய பாமியான் மாகாணத்துக்கும் இடையிலான நெடுஞ்சாலை வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்கானிஸ்தான்
    வெள்ளம்
    கனமழை

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    ஆப்கானிஸ்தான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி பாகிஸ்தான்
    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  உலக செய்திகள்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025