ஐபிஎல் 2023 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகினார் மார்க் வுட்
ஞாயிற்றுக்கிழமை (மே 7) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகிய மார்க் வுட் மிகவும் இதயப்பூர்வமான பிரியாவிடை உரையை நிகழ்த்தினார். இது தொடர்பான காணொளியை வெளியிட்டு அணி நிர்வாகம் மார்க் வுட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான மார்க் வுட் தனது இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதன் காரணமாக சொந்த நாட்டிற்குத் திரும்புகிறார். இதனால் ஐபிஎல்லின் எஞ்சியுள்ள போட்டிகளில் மார்க் வுட் விளையாட மாட்டார். ஐபிஎல் 2023 சீசனின் ஆரம்ப கட்டத்தில் மார்க் வுட் நான்கு போட்டிகளில் விளையாடி குறிப்பாக டெத் ஓவர்களில் அபாரமாக செயல்பட்டார். மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐந்து விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.