சச்சின் டெண்டுல்கர் காஷ்மீரின் குல்மார்க்கில் கல்லி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரல்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ளூர் மக்களுடன் கல்லி கிரிக்கெட் போட்டி விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சச்சின் தற்போது தனது முதல் காஷ்மீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இறுதி எல்லையைக் குறிக்கும் அமன் சேது பாலத்தையும் சச்சின் பார்வையிட்டார். அதிகாரிகளின் கூற்றுப்படி, அமன் சேதுவை ஒட்டிய கமான் போஸ்டில் நிலைகொண்டிருந்த வீரர்களுடன் சச்சின் டெண்டுல்கர் உரையாடி மகிழ்ந்தார். முந்தைய நாள், சச்சின் உள்ளூர் பேட் தொழிற்சாலைக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு அவர் தனது முதல் காஷ்மீர் வில்லோ பேட் பற்றி நினைவு கூர்ந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.